× Photographs படம் வளர்ந்த கதை Reader cartoons Contact Us

நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் ஒரு சிறு கார்ட்டூனில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறவர் மதி. தனது 21 வயதில் கார்ட்டூனிஸ்ட் பணியை ஆரம்பித்தவர், கடந்த 27 ஆண்டுகளில் 17000 கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறார். ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனசாட்சி. அதனாலேயே நம்மால் பார்க்க தொடங்கியதுமே நம்மால் ஒன்றி போய்விட முடிகிறது. இது அவரது கார்ட்டூன்களுக்கெனவே தொடங்கப்பட்ட பிரத்யேகமான இணையதளம்.

About Mathi

தனது பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும்...

Stepping Stones

"நியூஸ் டுடே'வில் கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்தபோது துக்ளக் ஆசிரியர் சோ அவர்களிடமிருந்து...

First Cartoon!

தினமணியின் முதல் பக்கத்தில் வெளியாகும் எனது அடடே கார்ட்டூன்களின் ஆறு தொகுப்புகள் 2008, ஏப்ரலில்...

Story Of a Cartoonist!

"வாட் இஸ் யுவர் ஆம்பிஷன்?'- இப்போதெல்லாம் இந்தக் கேள்வியைப் பிறந்த குழந்தையிடம்கூட கேட்பது...

×

அருள் பெற்றவர்


காலத்தால் அழியாத மகாகவிஞன் பாரதி, கடுமையான கவிதை உரைகளை எளிமைப்படுத்தி, புதிய, இனிய நடையை வகுத்துக் கொண்ட பாரதி, மக்கள் பிரச்னையிலிருந்து மகேஸ்வரன் பிரச்னை வரையிலே எதையும் விட்டதில்லை. வசனக் கவிதையிலே உலகை வென்றவன், தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை கவிதையில் சுட்டெரித்தவன், இந்திய சுதந்திரத்தை அடைந்து விட்டோம் என்று எண்ணி அடிமைப்பட்டு இருந்த நாளிலே "ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று'' வீர முழக்கமிட்டவன் பாரதி. பத்திரிகையாளனாக பாரதிதான் இந்தியாவிலே முதன்முதலாக தனது தாளாத உணர்ச்சியின் வெளியீடாக ஆழ்ந்த கருத்துகளை "இந்தியா' பத்திரிகையில் நகைச்சுவை உணர்வு ததும்ப கார்ட்டூன்களாக ஆக்கி ஒவ்வோர் இந்தியனையும் சிந்திக்கத் தூண்டினான்.
பாரதி உணர்ச்சிவாதி. திடீரென மேனி கொதிக்கும், நரம்பு துடிக்கும், இதயம் துள்ளி எழும், கண்டதைக் கண்டபடி நினைத்ததை நினைத்தபடி, அப்படியே கவிஞன் கொட்டிவிடுகிறான். உடலுக்குக் கரு, தாயின் வயிற்றிலிருந்து தோன்றுகிறது என்றால் உணர்ச்சிக்கரு பிறப்போடு வந்துவிடுகிறது என்று கவிஞன் கண்ணதாசன் கூறுகிறார். பிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி, உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னாளில் திடீரென்று கிளர்ச்சியடைந்து கவிஞனது இதயத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து வெளியிலே கொட்டுகிறது.
ஆனால், கார்ட்டூன் என்பது அதைவிட பல படிகள் மேலே சென்று, நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாகப் பார்த்து, அதைத் தன் உள்வாங்கி கற்பனைத் திறத்துடன் கலந்து, காண்போர் உள்ளத்தில் புன்னகையை வரவழைத்து, அந்தக் கருத்தின் ஆழத்தைச் சித்திரத்துடன் இரண்டு வரிகளில் குறுகத் தரித்த குறள்போல் வெளிப்படுத்த நூறாயிரத்தில் ஒருவருக்குத்தான் ஆண்டவன் அருள் புரிவான். அந்த அருள், பூரணமாக மதிக்கு, மதிக்கத்தக்க வகையில் கிடைத்திருக்கிறது.
என் வாழ்வில் கார்ட்டூன்: 1979-ஆம் ஆண்டு முதல் ISRO-வில் 7 வருடங்கள் கண்துஞ்சாது நானும் என் குழுவினரும் பணியாற்றி இந்தியாவின் முதல் ராக்கெட்டை வானிலே செலுத்தி தோல்வியைக் கண்டோம். நாங்கள் மனச்சோர்வு அடைந்து, இன்னும் ஒரு வருடத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற முடிவுடன், கடுமையான வேலையில் எங்களை ஆள்படுத்திக் கொண்ட நேரமது. எங்கள் குழுவினர் அனைவரும் காலை முதல் இரவு நெடுநேரம் வரை மிகவும் சிரத்தையுடன் பணிபுரிந்து கொண்டிருந்தோம். எப்பொழுதும் நாங்கள் அடைந்த தோல்வி எங்கள் மனதில் தோன்றித் தோன்றி துன்புறுத்தியது. திடீரென்று ஒருநாள் எனது நண்பர் ஒருவர் ஒரு ஃபைலை கொண்டுவந்து எங்களிடம் அளித்தார். அதைத் திறந்து பார்த்தபொழுது, எங்கள் தோல்வியைச் சித்திரித்து பல நாளிதழ்களிலே வெளிவந்த கார்ட்டூன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நான் உடனே எனது குழுவினரை அழைத்தேன். எல்லோரும் மிகவும் பொறுமையாக ஒவ்வொரு கார்ட்டூனையும் பார்த்து, அதன் அர்த்தத்தை, வேதனையை, நகைச்சுவை உணர்வை உணர்ந்து அன்றுதான் மனம் விட்டு விழுந்து விழுந்து சிரித்தோம், ஒரு மாதத்திற்குப் பின்னால். அன்றுதான் தோல்வியால் சோர்ந்துபட்ட எங்கள் எல்லோர் மனதிலும் வலியை நீக்கிய மருந்தைத் தடவியதைப் போன்று உணர்ந்தோம். எங்கள் எண்ணங்களில் சோர்வைப் போக்கி ஒரு மன உறுதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது அந்த நாள். அந்த கார்ட்டூன்கள் அறிவு சார்ந்த எண்ணங்களை ஏற்படுத்தியது. தோல்வியைக் கண்டு துவளக்கூடாது என்ற எண்ண உறுதியை எனக்கு மட்டுமல்லாமல் எனது SLV3 Project-ல் பணிபுரிந்த அனைவருக்கும் கொடுத்தது. அந்தப் புத்துணர்வுதான் "வெற்றியும், தோல்வியும் வாழ்வில் நிச்சயம்; தோல்விதான் வெற்றிக்கு முதல்படி' என்ற தத்துவத்தை எங்களது மனக்கண் முன் நிறுத்தியது.
அந்தக் கார்ட்டூன்கள்தான் எனக்கும், எங்கள் குழுவினருக்கும் இழந்த புத்துணர்ச்சியை மீண்டும் கொடுத்து 1980-இல் மீண்டும் SLV3-யை வெற்றிகரமாக விண்ணிலே ஏவ ஒரு காரணமாக இருந்தன. என் வாழ்விலே கார்ட்டூன்கள் எப்படியான திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது இதன் மூலம் விளங்கும். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் எந்தப் பத்திரிகையைப் படித்தாலும் அதில் எங்கு கார்ட்டூன் இருக்கிறது என்று தேடிப் பார்த்துப் படித்துவிட்டுத்தான் தலைப்புச் செய்திக்கே செல்வேன். எனவேதான், கார்ட்டூனை முதல் பக்கத்தில் போட வேண்டும் என்று நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது நாடு முழுவதும் உள்ள எனது பத்திரிகை நண்பர்களை அழைத்து வேண்டுகோள் விடுத்தேன்.
மதி அவர்கள் ஒவ்வொரு கார்ட்டூனையும் உருவாக்க, சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளைக் கற்பனை சக்திகொண்டு மனதிலே உருவாக்கி அதற்கு குறுகத் தரித்த குறள்போல் நகைச்சுவையுடன் கூடிய வார்த்தையைக் கொடுத்து அதைச் சித்திரமாகத் தீட்டிப் படைத்து வருகிறார்!
நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். பணி செய்து கொண்டிருக்கிறோம். இவற்றைச் செய்யும்போது நமக்கு வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். இதைப்பற்றி பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
பெரிய லட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
மதி அவர்களின் பணி பெரும் பணியாகும்.


- டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பாரத ரத்னா, மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர்.

×

சாகசக்கலை


கார்ட்டூன் - இன்றைய அரசியல், கலை, இலக்கிய வடிவமாக இருந்தபோதிலும் இது கற்காலம் தொட்டு தொடர்ந்து வருகிற ஒரு கலையாகும். The primitive form of entire art of paintings - என்பது சிந்தித்துப் பார்த்தவர்கள் தேர்ந்த முடிவாகும். தமிழ்ப் பத்திரிகை உலகம் மகாகவி பாரதி காலம் தொட்டு வளர்ந்து தொடர்ந்து இன்றைய நிலைமையில் பலபட பரிணமித்திருக்கிறது. இதில் ஏற்படுகிற பிரச்னைகளெல்லாம், இது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஆரோக்கியமான அடையாளமே ஆகும். மகாகவி பாரதி தமது சொந்தப் பத்திரிகையான "இந்தியா'வில்தான் முதன்முதலில் அரசியல் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தினார். அதாவது சுப்ரமணிய பாரதி என்ற பத்திரிகை ஆசிரியன், தனது அக்கால அரசியல் கருத்துகளைச் சூடுபறக்க, கல்லாரும், கற்றாரும் கண்டு உணர்ந்து காரியத்தில் ஈடுபட வேண்டும் என்கிற நோக்கில் கண்டுபிடித்த ஒரு மகத்தான கருத்தாயுதமே அந்த கார்ட்டூன்கள்.
பத்திரிகைகளோடு விரும்பியோ விரும்பாமலோ எனது வாழ்வின் பெரும் பகுதி பிணைந்திருக்கிறது. அக்காலத்தில் பல கார்ட்டூனிஸ்டுகளோடு நெருங்கிப் பழகவும், நேரிடப் புகழவும் எனக்கு வாய்ப்பிருந்தது. அண்மைக் காலத்தில் அந்த வாய்ப்புகள் குறைந்து போயின. எனினும் கண்ணில் படுகிற கார்ட்டூன்களைக் கருத்தூன்றி ரசிக்கும் பழக்கம் போகவில்லை. அவ்வண்ணம் பல சமயங்களில் தினமணி பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த சிறிய, பெரிய, அரசியல் கலந்த, கலவாத பல கார்ட்டூன்களை நான் பார்த்து மகிழ்ந்ததுண்டு. கதை எழுதியவரின் பெயரைக் கவனிக்காமல் கதை படித்து விடுபவர்கள் உண்டு. ஆனால் இந்தக் கார்ட்டூன் விஷயத்தில் அப்படி முடியாது. எங்கேயாவது ஒரு மூலையில் கிறுக்கலோடு கிறுக்கலாக இருக்கும். இந்த இரண்டெழுத்துக்காரர்கள், வாசகர்களின் பார்வையில் வகையாக சிக்கிக் கொள்வார்கள். அப்படி என் பார்வையில் சிக்கிக் கொண்டவர்தான் இந்த "மதி'.
நல்லது. ஒரு கார்ட்டூனை எப்படி ரசிக்க வேண்டும் என்று சொல்லித் தருவதைவிட அறியாமை கிடையாது. சில கருத்துகளின் கனத்தால் சிலருக்கு சில கார்ட்டூன்கள் புரியாமல் போகலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? கார்ட்டூன் என்பது கண்டு ரசிக்கும் வெறும் புலன் நுகர்ச்சிக்கு மட்டுமல்ல; கருத்துகளை உருவாக்குவதும் கற்றுத் தருவதுமான வடிவமுமாகும். அதன் பின்னால் இருக்கும் ஆழ்ந்த சித்தாந்தப் பின்னணியின் மகத்துவத்தைப் பொறுத்தே கார்ட்டூனின் சிறப்பும் அமையும். அதனால்தான் கார்ட்டூன் என்ற சொல்லை கேலிச்சித்திரம் என்றோ, சிரிப்புப்படம் என்றோ சொல்லுவது முழு அர்த்தத்தைத் தருவதில்லை. எல்லார் மனத்திலும் இருக்கிற, அவரவர் காலம் சம்பந்தப்பட்ட நடப்புகளின்மீது ஒரு கணத்தில் தோன்றி மறைகிற ரகசியமான "காமெண்ட்'டுகளை, பொறி போன்று வெடித்துச் சிதறி மறைகின்ற சிந்தனைகளை உள்வாங்கி காமிரா வெளிச்சத்தில் எடுத்துக் கொண்டு திருப்பித் தருவது போன்ற அரிய கலை இது. சாமானிய மனிதனையும், சமூகத்தை ஆட்டிப் படைக்கிற பெரிய மனிதனையும் இது பல சமயங்களில் முகமும் அகமும் சுருங்க வைக்கும். குற்ற உணர்ச்சி கொள்வதன்றி அந்தப் படைப்பாளியின் மீது குற்றம் சொல்ல மனம் வராது. கோபம் கொள்ள வேண்டிய, கொதித்துக் குமுறி அழ வேண்டிய, அவமானத்தால் குமைந்து சாம்பிச் சாக வேண்டிய பலசமூக அவலங்களைப் பார்த்து ஒரு கண் சிமிட்டலுடன் இவற்றோடு சம்பந்தமற்ற ஒரு Objectivity-யுடன் ஒரு கருத்தை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிற ஒரு சாகசக் கலை இது. நானறிந்தவரை நம் காலத்தில் இந்தக் கலையில் தேர்ந்தவராகவும் எதிர்காலத்தில் எண்ணற்ற சாதனைகளைப் புரியும் நம்பிக்கையைத் தருபவராகவும் எனது கண் முன்னால் அடையாளம் காட்டவும் சிபாரிசு செய்யவும் இதோ ஒருவர் இருக்கிறார் என்றால், அவரே இந்த திரு. மதி அவர்கள்.

- த.ஜெயகாந்தன் பத்ம பூஷண், சாகித்ய அகாதமி மற்றும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்.

×

கோப தாபங்களுக்கு அப்பாற்பட்டவை!


திரு. மதி அவர்களின் அரசியல் மற்றும் சமூக விமர்சனம் சார்ந்த கேலிச் சித்திரங்களை பல வருடங்களாக கவனித்து வருகிறேன். அவை பார்த்த மாத்திரத்தில் விமர்சனக் கருத்துகளை நான் உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னரே என் மனதுடன் நெருக்கம் கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. இதற்குக் காரணம், அவரது காட்சிப் பரிமாணமே இன்றைய தமிழ் வாழ்வின் பின்னணியுடன் கொண்டிருக்கும் இணக்கம்தான். கடந்த முப்பது, நாற்பது வருடங்களாகவே இந்திய அளவில் வரும் கேலிச் சித்திரங்கள் பிராந்திய வாழ்வுக்குரிய பசுமையை இழந்து, மொழி சார்ந்த உணர்வுகளையும் இழந்து, அறிவு சார்ந்தும், பல சமயங்களில் அரசியல் பண்டிதர்களால் மட்டுமே புதிர் அவிழ்க்கக் கூடிய பொருள் சார்ந்தும் மாற்றமடைந்துவிட்டன. வறட்சியான இம் மரபை உருவாக்கியவர்கள் அனைத்திந்திய அளவில் பெரும் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர்கள்தான். இவர்கள் உருவாக்கியுள்ள "புதுமை' காரணமாக மதி, மரபு சார்ந்த நேற்றைய சித்திரக்காரர் என்று கருதப்பட இடமுண்டு. அவருடைய அகலமான, ஆழ்ந்து பதியும் வரிகள் விமர்சனத்துக்கு உள்ளாகலாம். ஆனால் ஒரு மொழி பேசும் மக்களை மட்டுமே இலக்காகக் கொண்ட இவரது கேலிச் சித்திரங்கள் அவற்றின் பிராந்தியப் பசுமை காரணமாக லட்சக்கணக்கான வாசகர்களுக்கு மகிழ்வூட்டி, மதி கூற வரும் செய்தியை அவர்கள் மனங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. மதியின் கேலிச் சித்திரங்கள் கோப, தாபங்களுக்கு அப்பாற்பட்டவை. இவருடைய விமர்சனங்களில் விருப்போ பகை உணர்ச்சியோ இருப்பதில்லை. ‘மதி’யின் ஆற்றல் பெருகி மேலும் சிறப்பான கேலிச் சித்திரங்களை உருவாக்கிப் பெரும் வாழ்வுக்குரிய பெருமிதத்தை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

×

சத்திய தரிசனம்


என் நீண்ட ஆயுள் காரணமாக நான் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கார்ட்டூன் கலைஞர் டேவிட் லோ படங்களிலிருந்து இன்றைய மதி வரை கார்ட்டூன்களைப் பார்த்திருக்கிறேன். நகைச்சுவை, அரசியல், விமர்சனம் எல்லாருக்கும் பொதுதான். ஆனால் மதியுடைய நாட்டுப்பற்றும் மக்கள்பற்றும் எல்லாரிடமும் காணக் கிடைக்கவில்லை. இந்த ஒரு அம்சம்தான் மதியின் படங்களுக்கு ஒரு விசேஷப் பரிமாணம் தருகிறது. அவருடைய படங்களில் உள்ள சத்திய தரிசனம் அபூர்வமானது. ஒரு எடுத்துக்காட்டு: ராமரும் லட்சுமணரும் மரத்தடியில் திகைத்து நின்று கூறுவது, "இப்படிப் பாதி வழியிலே இறக்கிவிட்டுட்டாங்களே!''

- அசோகமித்திரன்/ சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

பிற்சேர்கை: அன்புள்ள மதி அவர்களுக்கு, தாங்கள் ஆங்கில இதழிலும் இடம் பெற வேண்டும். தங்களது போன்ற மேதமையும் மனோதர்மமும் தமிழ் எல்லைக்கும் அப்பால் பங்கு பெறவேண்டும் வியப்புடன்/ அசோகமித்திரன்.

×

மக்கள் கலைஞர்’ மதி


மதியின் கார்ட்டூன்கள் - "அடடே!' உள்ளிட்ட உளம் கவரும் கருத்துப் படங்கள் - 1997 ஆம் ஆண்டிலிருந்து "தினமணி' நாளேட்டில் வருவதுடன், நூல் வடிவிலும் சில ஆண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் இல்லங்களில், அரிய கருத்துப் பெட்டகமாகப் பேணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை, மதியின் கருத்துப் படங்கள், "புதுநெறி காட்டிய புலவன்' மகாகவி பாரதியின் விடுதலைக் கண்ணோட்டத்தில், வீறுமிக்க படைப்பாற்றலுடன் திகழ்பவை; இன்றைய காலகட்டத்தில், கருத்தளவிலும் கலையுலகிலும், உலகத் தரத்தை மதியின் கார்ட்டூன்கள் எட்டிவிட்டன; அவர் ஒரு முதல் தரமான "மக்கள் கலைஞர்'; மனித குல விடுதலைக்காகவும், மனித மாண்புகளைப் பேணவும், புதியதோர் உலகம் சமைக்க விழையும் அனைவரும், மதியின் அறிவுத் தெளிவையும், சுதந்திர தாகத்தையும், நெஞ்சு உறுதியையும், உலகு தழுவிய மனித நேயத்தையும், எளிமையும் கூர்மையும் நுட்பமும் ஒளிரும் படைப்பாற்றலையும் நெஞ்சாரப் பாராட்டுவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. "எல்லாம் மனிதனுக்கே! மனிதகுல மேம்பாட்டுக்கே!'' எனும் விழுமியத் தத்துவப் பாதையில், மதியின் சீரிய ஓவியப் பயணம், மேன்மேலும் வெற்றிகரமாகச் செல்கிறது! நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தவர் மேனிலை எய்தவும், மதியின் கருத்துப் படங்கள், உலகெலாம் வலம் வந்து உள்ளங்களுக்கு உவகையும், விடுதலை எழுச்சியும் ஒருங்கேதருவதாகவும் இருக்கிறது!

- தி.க.சி சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

×

இது மதியின் காலம்


சூனியத்திலிருந்துதான் தோன்றியது எல்லாம் என்பார்கள்.இது எனக்குப் புரியவில்லை.எனக்கு தோன்றுவது: ஒன்று இருந்தால்தான் அதிலிருந்துமற்றது வரும் என்பது.
அப்ப தோற்றுவிப்பதை அவள் என்போம். சூரியம் பூமியை ஈன்று சூரியதேவி ஆனாள்.பூமி சந்திரனை ஈன்று பூமி மாதா ஆனாள். இப்படித்தான் பார்க்கிறேன்.
கலைகளின் அதிதேவதையான பாரதி பெற்றெடுத்த பாரதிதான், சுப்ரமண்ய மகா கவி. இந்த பாரதி பல"இது''களைப் பெற்று நமக்குத் தந்தவைகளில் ஒன்றுதான் இந்தக் கார்ட்டூன் (கோட்டுச் சித்திரம்).
பாரதியின் காலம், அடுத்து அவன் பிள்ளைகள் பேரன்கள் கொள்ளுப் பேரன்கள் என்று நான்காவது தலைமுறை நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது மதியின் காலம்.
ஒரு செய்தியைச் சொல்ல ஒலி அல்லது சைகை அல்லது எழுத்துகள் வேண்டும்.இவை இல்லாமல் வெறும் ஒரு ஃபோட்டோவை மட்டுமே பிரசுரிப்பதன் மூலம் ஒரு செய்தியைத் தரலாம்.இவையாவும் இல்லாமல் சில கோடுகளின் கீய்ச்சல் மூலம் நகைச்சுவையோடு பலதைச் சொல்லுவதே ஒரு கலை. விமர்சனத்தில் இதும் ஒரு வகை.
நிலைக் கண்ணாடிகளில் பல வகை. கோணல் மாணல்களிலும் நீளமாக, குண்டாக, அக்கிரமமாகக் காண்பிப்பதைப் பார்த்துச் சிரிக்கிறோம் வாய்விட்டு.இதே கண்ணாடிகளால் மன்மோகன் சிங்கின் தலைப்பாகை பின்பக்கமாக எந்த விநாடியிலும் கீழே விழப் போவதைப் போல காண்பிக்க முடியுமா!
ஆரம்ப காலங்களில் இந்த அதிமிகைகளைப் பார்த்த அரசியல்வாதிகளின் மனைவிமாரும் பிள்ளைகளும் சினமும் வருத்தமும் கொள்ளத்தான் முடிந்தது. காலம் இப்போது அவர்களையும் பழக்கிவிட்டது.
ஒரு சிறந்த கார்ட்டூனுக்கு மொழி தேவையில்லை என்பார்கள். எந்த மொழிக்காரன் அதைப் பார்த்தாலும் சிரித்து மகிழ்வான். ""மதி கார்ட்டூன்ஸ்'' என்ற இந்தப் பெரும் தொகுப்பின் அட்டை முகப்பிலேலே வட தமிழ்நாட்டையும் தென் தமிழ்நாட்டையும் பிரித்துக் காட்டியிருப்பது! இதன் கீழ்ப் படத்தில் நிறைந்த குப்பைக்கூட்டைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போவதை மட்டும் காட்டியிருப்பதே போதும்; "நீக்கப்பட்ட அமைச்சர்களாகத்தான் இருக்கும்'' என்று சொல்லவும் வேண்டுமா.
வாசகம் எதுவும் இல்லாமல் பார்த்தவுடன் பொத்துக் கொண்டுவரும் சிரிப்புக்கு எடுத்துக்காட்டுகள்:
62 ஆம் பக்கத்திலுள்ள"தொகுதிப் பங்கீடு''
59 ஆம் பக்கத்திலுள்ள"உள் ஒதுக்கீடு வேணும்!''
சிரிப்பிலிருந்து கோபமும் வரும்.
சித்திரங்களின் கோடுகள் வானத்திலிருந்து இறங்கும் மின்னல்களுக்கு ஒப்பானவை. தண்ணீரிலிருந்து நெருப்பு உண்டாகும்.
மேகம் தண்ணீர்தான் மதியின் கோடுகள் மின்னலுக்குச் சமானமானவை.

- கி. ராஜநாராயணன்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

×

கோட்டோவியக் கவிஞர்


எழுத்துகளை நம்பிப் பிழைக்கும் என் போன்ற படைப்பாளிகள், கோடுகளை நம்பி ஜொலிக்கும் மதி போன்ற கார்ட்டூனிஸ்டுகளைக் கண்டு பொறாமைப் பட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காரணம், படிக்கின்றவர்களை ஈர்க்கும் ஓர் அரசியல் அங்கத நாவல் எழுத வேண்டுமென்றால், ஒரு படைப்பாளி முந்நூறு பக்கங்கள் எழுதியாக வேண்டும். ஆனால் அதே அங்கதச் செய்தியை மதி ஏழெட்டுக் கோடுகள் மூலம் "பளிச்'சென்று உணர்த்திவிடுகிறார். வாசகனையும் நேரடியாக, உடனுக்குடனே சென்று அடைகிறது. இதுதான் கார்ட்டூன் சித்திரங்களின் வெற்றி.
இதனால் கார்ட்டூன் வரைவதென்பது, மிகச் சுலபமான வேலை என்று முடிவு கட்டி விடலாகாது. முந்நூறு பக்க நாவல் எழுதுவதற்கு ஒரு படைப்பாளி எந்த அளவுக்கு தீவிரமாக சிந்திக்கின்றானோ, அதே அளவுக்கு ஒரு அரசியல், சமூக அங்கத கார்ட்டூன் வரைவதற்கு, ஒரு கார்ட்டூனிஸ்ட் சிந்தித்தாக வேண்டும். கோடுகளைக் கட்டி ஆளும் ஓவியத் திறமை வேண்டும். நடப்பு விவகாரங்களில் ஈடுபாடு இருபதோடு மட்டுமல்லாமல், அவற்றை உள்வாங்கிகொண்டு, தார்மீகக் கோபத்தினால் உந்துதல் பெற்று- ஆனால் கோபம் வெளிப்படாமல்- நகைச்சுவை இழைந்தோட கார்ட்டூன் வரைபவரே உன்னதக் கலைஞர் அந்த ஆற்றல், இன்றைய இந்திய கார்ட்டூனிஸ்டுகளில், மதிக்கு அபரிதமாக கைகூடியிருக்கிறது.
அவர் கார்ட்டூன்கள் do not dateஎன்பதற்குச் சான்று. அவருடைய பழைய கார்ட்டூன் ஒன்றை இன்று பார்த்தேன்.
"ஐம்பது வருட வளர்ச்சி'' என்றவொரு கார்ட்டூன். ஏராளமான அரசியல் கட்சிக் கொடிகள் பறக்கின்றன. நடுவே வளராமலேயே நின்றுவிட்ட நமது தேசியக் கொடி. இதை அவர் 1997இல் வரைந்திருக்க வேண்டும். இப்பொழுது வரைந்தாரானால், இன்னும் சில கொடிகளுடன் கூடிய படமாக அது இருக்கும்.
இன்னொரு படம் ஜெயலலிதா முயலாமிடம் சொல்லுகிற மாதிரி.
"குதிரை ரெடியாச்சு. நாம் எதிரிகளைத் தாக்க வேண்டிய நேரம் வந்தாச்சு, முயலாம்ஜி.'
மரத்திலான ஒரு குதிரை நிற்கிறது. கை, கால், வால், எல்லாமே ஒட்டுப் போட்ட மாதிரி இருக்கிறது. ஏறி உட்கார்ந்தால், விழுந்து விடலாம். அல்லது அது "ட்ரோஜன்' குதிரையாகவும் இருக்கலாம். அரசியலில் யார் நண்பன், யார் எதிரி என்று சொல்ல முடியாது.
இத்தனைக் கருத்துக்களையும் உள்ளடக்கிய இக்கார்ட்டூன், இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது.
தமிழ்ப் பத்திரிகைகளில், கார்ட்டூன் கலாசாரத்தைத் துவக்கிய முன்னோடிகளில் மகாகவி பாரதி முக்கியமானவர். மதி, பாரதி வழியில் வந்த ஓர் அற்புதமான கோட்டோவியக் கவிஞர்.

- இந்திரா பார்த்த சாரதி
பத்ம ஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்

×

சித்திரச் சிந்தனையாளர் மதி!


பத்திரிகை என்ற ஊடகத்தில் வாசிக்க வைக்கும் முயற்சிகள் தினந்தோறும் நடக்கின்றன. யோசிக்க வைக்கும் முயற்சிகளை சிலரே செய்கிறார்கள்; அவர்களுள் ஒருவர் சித்திரச் சிந்தனையாளர் மதி அவர்கள்
மதி வரைந்த சித்திரமென்றால் கண்கள் அங்குதான் நங்கூரம் போடும். முதலில் சிந்தனையை ரசிக்கும்; பிறகு சித்திரத்தை ரசிக்கும்; சிரிக்கும்; பிறகு சிந்திக்கும்.
ஒரு கேலிச் சித்திரக்காரரின் பொறுப்பு சமூக விமர்சனம் செய்வது மட்டுமன்று. சமூகம் பற்றிய விழிப்பை வளர்ப்பது; பொதுவாழ்வு பற்றிய பொறுப்பை வளர்ப்பது; இரண்டையும் மதி அவர்கள் செய்கிறார்கள்.
ஒரு தலையங்கம் முழுக்க எழுதி ஊட்டவேண்டிய அறிவை ஒரு சித்திரத்தின் மூலம் எளிமையாய் வலிமையாய்ச் சொல்லிவிடும் "மதி'யின் மதி மதிக்கப்பட வேண்டியது.

- வைரமுத்து
பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ,
சாகித்ய அகாதமி விருது மற்றும் 7 முறை தேசிய திரைப்பட விருது பெற்ற கவிஞர், எழுத்தாளர்

×

தனித்தன்மை கொண்டவர்


ஒரு விஷயம் பற்றிய விமர்சனத்தை கட்டுரை வடிவில் தெரிவிப்பதை விட, கார்ட்டூனாக பதிவு செய்வது சற்று கூடுதல் சிரமம் அளிப்பதாகும். நாட்டு நடப்புகளில் தொடர் கவனம் மட்டுமன்றி, ஓவியத் திறமையும், அடிப்படையில் ஹாஸ்ய உணர்வும் கார்ட்டூனிஸ்டுக்கு இருத்தல் அவசியம். அன்றாட அரசியல் நிலைகளையும், தலைவர்களின் பேச்சுகளையும் உன்னிப்பாக கவனித்து, ரசிக்கத்தக்க வகையில் அதைக் கார்ட்டூனாக வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் "துக்ளக்'கில் சில வருடங்கள் கார்ட்டூனிஸ்ட்டாக பணிபுரிந்த மதி, ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களைப் படைக்கின்ற புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள் வரிசையில் வைக்கின்ற அளவுக்கு திறமை படைத்தவர்.

"தினமணி' கார்ட்டூனிஸ்ட் திரு மதி அவர்கள், தமது கார்ட்டூன்களை, தினமணி வாசகர்கள் மட்டுமின்றி, இன்னும் ஏராளமானோர் ரஸிக்கும் வகையில், அப்படியே இணையதளத்தின்மூலம் வெளியிட பிரத்யேகமாக ஒரு இணையதளம் தொடங்க இருப்பது வரவேற்புக்குரியது.

"துக்ளக்' உட்பட பல பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த மதி, தமது கார்ட்டூன்கள் மூலம் வாசகர்களைச் சிரித்து ரசிக்க வைப்பதோடு, மிகக் கூர்மையாகவும், அழுத்தமாகவும் விமர்சனத்தைப் பதிவு செய்யும் தனித்திறமை கொண்டவர் என்றால் அது மிகையல்ல. அவரது கார்ட்டூன்களில் 95 சதவிகிதம் இத்தகைய சிறப்புகளைக் கொண்டவையாக அமைந்து வந்திருக்கின்றன.

பத்தி பத்தியாக ஒரு கட்டுரை எழுதி, ஒரு கட்டுரையாளர் வெளிப்படுத்தக் கூடிய விமர்சனத்தை அல்லது உருவாக்கக் கூடிய தாக்கத்தை ஒரு கேலிச் சித்திரம் மூலம், மிகச் சுலபமாக ஏற்படுத்தி விடக்கூடிய திறமை மதியிடம் கொட்டிக் கிடக்கிறது. இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட மதி, அரசியலைக் கூர்ந்து பின்பற்றி, முரண்பாடுகளைச் சரியாக உள்வாங்கி, பொருத்தமான வகையில் அதை வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது.

இன்று தமிழ்ப் பத்திரிகையுலகில் முன்னணி கார்ட்டூனிஸ்ட் என்ற இடத்தை மதி எட்டிப் பிடித்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது கடும் உழைப்பும், முனைப்புமே முக்கியக் காரணங்களாகும். துக்ளக்கின் அட்டைப் படத்திலும், உள் பக்கங்களிலும் அவர் வரைந்த கார்ட்டூன்கள் "துக்ளக்' வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்தன.

இன்று தினமணியில், ஒவ்வொரு நாளும் "அடடே' என்ற தலைப்பில் அவர் வரையும் கார்ட்டூன்களும் சரி, அவ்வப்போது சுளீரென்ற விமர்சனம் போல அவர் வரையும் உள்பக்கக் கார்ட்டூன்களும் சரி, தினமணிக்குப் பெருமை சேர்த்து வருகின்றன.

இனி இணையதளத்தின் மூலம் அவரது கார்ட்டூன்களைக் காணும் வாய்ப்பைப் பெறுவோரிடையேயும், அவரது கார்ட்டூன்களுக்கு பெரும் வரவேற்பு கிட்டும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

கார்ட்டூனிஸ்ட் மதி மேன்மேலும் புகழ் பெற என் வாழ்த்துகள்.

-சோ
பத்ம பூஷண் விருது பெற்ற பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக, திரைப்பட நடிகர்.
‘துக்ளக்’ வார இதழ் நிறுவிய ஆசிரியர்.

×

சம்பந்தப்பட்டவரும் சிரிக்க முடியும்


கார்ட்டூன் என்பது கேலிச்சித்திரம், கருத்துப் படம் என பல பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகிறது. கார்ட்டூன் என்பது சித்திரம் அல்ல. ஆனால், சித்திரம் இல்லாமல் கார்ட்டூன் இல்லை. மகாகவி பாரதிதான் முதன் முதலாகத் தனது "இந்தியா' பத்திரிகையில் இந்தப் புதிய பாணியை தமிழில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தினார். கேலிச்சித்திரங்களை அவரே வரைந்தும் இருக்கிறார்.
கார்ட்டூனிஸ்ட் மதி தொடக்கத்தில் "ஆனந்த விகடன்' இதழில் மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமாகி, பின்னர் "துக்ளக்'கில் சில ஆண்டுகள் பணியாற்றி, அதன்பின்னர் பிரபல "தினமணி' பத்திரிகையில் சேர்ந்து கார்ட்டூனிஸ்ட்டாக பிரபலமாகியுள்ளார்.
மனிதனுடைய தனித்தன்மைக்கு சிந்தனையைவிட, சிரிப்பு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் எல்லோருக்கும் சிந்திக்கத் தெரிகிறதோ இல்லையோ, சிரிக்கத் தெரியும். மனிதனைத் தவிர எந்த ஜீவராசியும் சிரிப்பதில்லை.
சிரிப்பு என்பது ஒன்பான் சுவைகளில் நகைச்சுவையாக நமது இலக்கியங்களில் உள்ளது. சிரிப்பில் புன்சிரிப்பும் உண்டு; வெடிச் சிரிப்பும் உண்டு. "வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார்கள்.
தனிமையில் உட்கார்ந்திருக்கிறவர் ஒரு கார்ட்டூனைப் பார்த்துச் சிரிக்கிறார் என்றால், அது சிரிப்பவரை மனிதராகவும், சிரிக்கச் செய்பவரைச் சிறந்த கார்ட்டூனிஸ்டாகவும் காட்டிவிடுகிறது. மதிப்பிற்குரிய கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள், வாசகர்களை மனிதனாக்குகிற மகத்தான பணியைச் செய்து வருகிறார். "தினமணி'யில் அவருடைய கருத்துப் படங்களை நான் தினந்தோறும் பார்த்து ரசிக்கத் தவறியதில்லை.
தலையங்கத்தில் கருத்துகளை விடவும், நடுப்பக்கக் கட்டுரைகளிலுள்ள தகவல்களை விடவும் சின்னதாக இவர் வரைகின்ற அன்றைய கேலிச்சித்திரம் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டி, நம்மைச் சிந்திக்கவும், சிரிக்கவும் தூண்டுகின்றன.
இதிலுள்ள விசேஷம், இந்தக் கார்டடூனில் சம்பந்தப்பட்டவரும் நம்மோடு சேர்ந்து சிரிப்பதுதான். நான் லயோலா கல்லூரியில் 1938-42 இல் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த மாணவர் தாணு ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட்டாக இருந்தார். "ஆனந்த விகட'னில் நீண்ட காலம் அவர் பணியாற்றியது இப்போது எனது நினைவுக்கு வருகிறது. அத்தகைய சக கார்ட்டூனிஸ்டே மதியை "கர்வப்படாத கலைஞர்' என்று கூறியுள்ளது முற்றிலும் உண்மை!
கார்ட்டூனுக்கென்றே வெளியாகி வந்த "சங்கர்ஸ் வீக்லி'யின் கருத்துப் படங்கள் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.
கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள், இந்தச் சித்திர வித்தையைக் கருவிலேயே திருவுடையவராகப் பெற்று வளர்ந்துள்ளார். இந்த வளர்ச்சி 2013-ஆம் ஆண்டு அவருடைய இணையதளத்தில் இடம்பெறப் போகும் இடைக்கால வளர்ச்சிதான்.
இன்னும் அவர் தொடக்கூடிய சிகரங்கள் பல உள்ளன. கார்ட்டூனிஸ்ட் மதியினுடைய இணையதளம் அவரை உலகமய கார்ட்டூனிஸ்ட்டாக்கும் சாதனையைச் செய்யும் என்ற நம்பிக்கையோடு அவரைப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

- நா.மகாலிங்கம்
பத்ம பூஷண் விருது பெற்றவர், தொழிலதிபர், நிறுவனர், சக்தி குழுமங்கள்.

×

சித்திரங்களின் சிந்தனைக் களஞ்சியம்!


தற்போதைய பத்திரிகை உலகில் மதி அவர்களின் கார்ட்டூன்கள் தனிப்பட்ட சிறப்புடன் பலராலும் நாள்தோறும் எதிர்பார்க்கக் கூடியனவாக இருக்கின்றன. அவரது கேலிச் சித்திரங்கள் சிரிப்பின் மூலம் சிந்தனையை வளர்க்கும் கலைக் களஞ்சியம்.

கார்ட்டூன் என்றால் அரசியல் கேலிச் சித்திரம் என்று ஆங்கிலம்- தமிழ் அகராதியில் பொருள் தரப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, ஜனநாயக உணர்வைப் பாதுகாப்பதில் பத்திரிகை உலகம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களை அல்லற்படுத்தும் குற்றங்களை, குறைபாடுகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளை வலியுறுத்தவும் பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன. கொடுமைகளை நீக்க கடுமையான கட்டுரைகளும், ஆத்திரமிக்க அறிவுரைகளும் தரும் பலன்களைவிட, கனிவாக, மென்மையாக, மக்களுக்கே புரியாத வகையில் நடைபெறும் அவலங்களைப் புலப்படுத்த, சிரிக்கும் வகையில் எளிதில் வெளிப்படுத்த கேலிச் சித்திரங்கள் மிகவும் பயன்படுகின்றன.

இங்கிலாந்து நாட்டில் பிரபல கேலிச் சித்திரக்காரராக விளங்கியவர் "லோ' என்பவர். அவரின் முழுப் பெயர் டேவிட் அலெக்சாண்டர் செசில்லோ (1891-1963). நியூசிலாந்து நாட்டில் பிறந்தவர். சிறுவயதிலேயே சித்திரங்கள் வரைவதில் பழகி, பிறகு இங்கிலாந்து வந்து கார்ட்டூன்கள் வரைவதில் முதலிடம் பெற்றார். 1930 முதல் ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் நடத்திய பாசிச ஆட்சி உலக ஜனநாயக நாடுகளை அதிரவைத்தபோது, லோ வரைந்த கார்ட்டூன்கள் அந்த எதேச்சாதிகாரிகளை கேலி செய்து அகற்றப்பட வேண்டிய கேலிக்குரிய கோமாளிகளாக ஆக்கின.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற சர்ச்சில் ஆற்றிய உணர்ச்சிமிக்க முழக்கங்களைவிட, நேசப் படைகள் எழுச்சியுடன் போர்க்களங்களில் நடத்திய வீரதீரச் செயல்களைவிட லோ வரைந்த சித்திரங்கள் நாள்தோறும், கனிவாக, வெற்றியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவதில் பொதுமக்களை உற்சாகப்படுத்தின. ஜெர்மனி வெற்றி பெற்று இங்கிலாந்து நாட்டை அடிமைப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததும், தனக்கு எதிராக இருந்தவர்களைத் தீர்த்துக்கட்ட ஹிட்லர் தயாரித்து வைத்திருந்த கருப்புப் பட்டியலில் லோவின் பெயரும் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்ததாம்!

சிரிக்க வைப்பது சிந்தனையைத் தூண்ட வேண்டும். அழுதவன் சிரிக்க ஆரம்பித்தால், சிரித்தபடி அவனை அழ வைத்த ஆணவக்காரர்கள் அழும் காலம் விரைவில் வந்துவிடும்.

- இரா. செழியன்
மூத்த அரசியல் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

×

"மதி'! இயற்பெயரா, புனைப்பெயரா?


"மதி'! இது இயற்பெயரா, புனைப்பெயரா? கற்பனைவளம் மிக்க அவரது படைப்புகளைப் பார்க்கும்போது, அவர் வேண்டுமென்றே சொந்தப் பெயரை மறைத்து, தமது கார்ட்டூன்களுக்கு புத்துயிர் கொடுக்கக் கூடிய "மதி' என்ற புனைப்பெயரைத் தனதாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆழ்ந்த அர்த்தமுள்ள ஒரு சொல் இந்த "மதி' கார்ட்டூன் என்பது. அதனுள் அடங்கியிருக்கும் ஆழ்ந்த கருத்துகளுக்கு அளவே கிடையாது. உண்மையில், சில கார்ட்டூன்களின் கருத்துகள் அவற்றை வரைந்த கலைஞரின் கற்பனையையும் தாண்டிக் கூட போவதுண்டு.

பின்னோக்கிப் பார்க்கிறேன்: ""ஆனந்த விகடன்'' பத்திரிகைக்கு தங்கள் திறமையால் வலுக்கொடுத்த அரிய கலைஞர்கள் பலர் என் நினைவில் வரிசையாய் நிற்கிறார்கள். ஸி.வி. மார்க்கன், மாலி, ராஜு, கோபுலு, ஸ்ரீதர் ("மெரீனா'), சில்பி, தாணு, மதன் - இப்படி எத்தனைபேர்! எத்தனை வகையான திறமைகள்! காலம் முடியும் வரை இவர்கள் நம் நினைவில் நிற்பார்கள்.

மதி வரைந்த ‘கிரிக்கெட் கார்ட்டூன்’களில் இரு சாம்பிள்கள் : பிள்ளையார் கோயிலில் ஒரு பக்தர் ‘‘ஸ்வாமி, இன்னிக்கு மாட்ச்ல கண்டிப்பா நாமதான் ஜெயிக்கணும்; அப்படி ஜெயிச்சா நாங்க அடிக்கற ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு தேங்காய் ஒடைக்கிறேன்’’ என்று கதறுவதாக ஒரு கார்ட்டூன்!

இன்னொரு படம்: ‘‘கிரிக்கெட் வெறிபிடித்த ரசிகர் ஒருவரை கண் டாக்டர், கொஞ்ச தூரத்தில் ஆங்கில எழுத்துக்களைத் தொங்கவிட்டு அவனைப் படிக்கச் சொல்கிறார். அந்த ரசிகரோ அந்த போர்டை உற்றுப் பார்த்து ஒரே வார்த்தையில் ‘கிரிக்கெட்’ என்று வெற்றி முழக்கத்தோடு சொல்கிறார்! என்ன செய்வது! இது ஒருவிதக் கிறுக்கு!

இப்படி அனைத்துக் கார்ட்டூன்களும் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன; கூடவே சிந்திக்கவும் வைக்கின்றன. ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் ஸ்பெஷாலிடி இது. வீட்டுக்குக் கொள்ளையடிக்க வந்த திருடனைப் பார்த்து, வீட்டுச் சொந்தக்காரர், ‘‘இங்கே இருந்த எல்லா சாமான்களையும் வித்து நேத்துதான் என் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டினேன். ஒங்களுக்கு எதுவும் மிஞ்சாதே’’ என்று அனுதாபத்துடன் கூறுகிறார். இது எப்படி இருக்கு!

மதியின் கார்ட்டூன் ஒவ்வொன்றையும் பல நாள்கள் ஐந்தாறு தடவை பார்த்துப் பார்த்து வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். அவரது கார்ட்டூன்களைப் பற்றி சொல்வதாக இருந்தால் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். "மதி'யின் கற்பனைவளம் அளவில்லாதது. "மதி'யின் கார்ட்டூன்கள் என்றென்றும் வாழும் என்பதில் சந்தேகமேயில்லை. அவருடைய கார்ட்டூன்கள் அனைத்தும் அவற்றின் கருத்து வலிமையால் என்றென்றும் போற்றப்படும்.

- பூர்ணம் விசுவநாதன்
சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர், நாடக மற்றும் திரைப்பட நடிகர்.

×

மதி மிக்க மதி


கேலிச் சித்திரம் அல்லது கார்ட்டூன், இன்று பத்திரிகைகளின் அத்தியவாசியமான ஒரு அங்கமாகி விட்டது. நாளிதழோ, வார இதழோ, அல்லது மாத இதழோ, மிகப் பெரும்பான்மையும் கேலிச்சித்திரங்கள் இல்லாமல் வெளி வருவதில்லை. வாசகர் கண்களும் பத்திரிக்கையைத் திறக்கும்போது, முதலில் தேடுவது இந்தக் கேலிச் சித்திரங்களையே.

கேலிச் சித்திரம் நவீனப் பத்திரிக்கை யுகத்தின் குழந்தை. அதைத் தமிழகத்துக்கு முதலில் அறிமுகம் செய்தவர். நம் மகாகவி பாரதியே. எழுத்தறிவுள்ள மக்கள் மிகக் குறைவாக இருந்த அந்த காலத்தில் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அவர் கேலிச் சித்திரம் என்னும் இந்த ஆயுதத்தை மிகச் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்.

கேலிச் சித்திரம் அல்லது கார்ட்டூன், இன்று பத்திரிகைகளின் அத்தியவாசியமான ஒரு அங்கமாகி விட்டது. நாளிதழோ, வார இதழோ, அல்லது மாத இதழோ, மிகப் பெரும்பான்மையும் கேலிச்சித்திரங்கள் இல்லாமல் வெளி வருவதில்லை. வாசகர் கண்களும் பத்திரிக்கையைத் திறக்கும்போது, முதலில் தேடுவது இந்தக் கேலிச் சித்திரங்களையே.

இந்தியச் செல்வத்தை பிரிட்டன் கொள்ளையடித்துச் செல்கிறது என்பதை விளக்க, இந்தியாவைப் பசுவாகவும் வெள்ளைக்காரனைக் கொள்ளையிடும் பால்காரனாகவும் அன்று அவர் சித்தரித்திருந்த முறை, எழுத்தறிவற்ற மக்கள் மட்டுமல்ல, எழுத்தறிவுள்ள மக்களும் புரிந்து கொள்ளவும், இந்தக் கொடுமைக்கு எதிராகக் கோபம் கொள்ளவும் வைத்தது. ஆம், நல்ல கேலிச் சித்திரம் இந்தப் பணிகளைத் தான் செய்யும், செய்யவும் வேண்டும்.

பாரதியின் கேலிச் சித்திரங்களை இன்று பார்ப்பவர்கள், அன்று மட்டுமல்ல, இன்றும் நம் நாடு மேற்கத்திய நாடுகளால் எப்படிச் சுரண்டப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுவார்கள். நல்ல கேலிச் சித்திரத்தின் ஆற்றல் அது. வெளியிடப்படும் காலத்துக்குப் பயன்படுவதோடு, அது தன்னை நிறுத்திக் கொள்ளுவதில்லை. நெருக்கடி வரும் எல்லாக் காலங்களிலும் மக்களை விழிப்படைய வைக்கும் ஆற்றல், உய்த்துணர வைக்கும் சாதுரியம் என்றென்றைக்கும் அதற்கு உண்டு. அந்த வகையில், கேலிச் சித்திரம் ஒரு அற்புதமான கலைவடிவமாகிவிடுவதையும் நாம் காணமுடியும். நல்ல கலை, காலம், சூழல் கடந்தும் புதுப்புதுப் பொருள் தந்தபடி வாழும்.

ஆர்.கே. லக்ஷ்மண் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தை உலகம் இன்றும் கொண்டாடுகிறது. பாராளுமன்றத்தைச் சுற்றி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவும், அவர் பின்னால் லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் இன்னும் சிலரும் ஓடுவதாக அந்தக் கேலிச் சித்திரம் இருக்கும். அந்தக் கேலிச் சித்திரத்தின் வரிசைப்படியே இந்தியாவில் பிரதமர்கள் வந்துகொண்டிருந்ததை வரலாறு நமக்கு மெய்ப்பித்தது. நல்ல கேலிச் சித்திரங்கள் தீர்க்க தரிசனங்களாகவும் ஆகிவிடுகின்றன.

சமூக வாழ்வு முப்பரிணாமம் கொண்டது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று பரிணாமங்களிலும் கேலிச் சித்திரங்கள் உருவாகி, பார்ப்பவர்களை வளர்ச்சிப் பாதையில் வழிகாட்டுகின்றன, வழிகாட்ட வேண்டும்.

நல்ல கேலிச் சித்திரங்கள் மிகமிக எளிமையானவை. பார்த்த மாத்திரத்திலே பொருள் உணர்ந்து கொள்ளத்தக்கவை. சமூகம் முன்னோக்கிச் செல்வதற்கு எதிரான முட்டுக்கட்டைகளை பளிச்செனச் சுட்டிக்காட்டுபவை. ஆட்சியாளர்கள் செய்யும் அடாவடித்தனங்களை, கோல்மால்தனங்களை, பல சமயங்களில் அவர்களது ஏமாளித்தனங்களை, சமூகத்தின் நெஞ்சில் சுருக்கெனத் தைக்கிற மாதிரிச் சுட்டிக்காட்டுபவை.

ஆனால் வாய்மையின் மீது, மனித தன்மையின் மீது, நேர்மையின் மீது காலூன்றி நிற்காத எந்தக் கேலிச் சித்திரமும் சமூக மனதில் வேர் விடாது.

சமூக மனமே கேலிச் சித்திரத்தின் இலக்கு. சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும், தெளிவுபடுத்த வேண்டும், தவறுக்கு எதிராகச் சரியை நோக்கிச் சமூக மனதைச் சூடேற்றிக் கூர்மைப்படுத்த வேண்டும்.

கேலிச் சித்திரத்தில் வரும் சமூக மனிதன் ஒரு அப்பாவி. பெரும்பாலும் இந்தியாவின் அடித்தளமாக அமையும் கிராமத்தான் அவர். தொடர்ந்து அரசியல்வாதிகளாலும், பொருளாதார வாதிகளாலும் போலிப் பண்பாட்டாளர்களாலும் ஒடுக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும் தேங்கிப் போனவர் அவர். இந்த அப்பாவியான ""வெகுஜனத்தை'' விழிப்படையச் செய்வதே கேலிச் சித்திரத்தின் வேலை. நல்ல கேலிச் சித்திரம் மின்னல் போல சமூகத்தினுள்ளே ஒளி பாய்ச்சும். புரிதலை விரிவுபடுத்தும். விழிப்புணர்வை மேன்மைப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஜனநாயகக் கடமையைச் செய்வதில் அதன் பணி மிக மிக முக்கியமானது.

இந்த முக்கியமான பணியைச் செய்யும் கேலிச் சித்திரக்காரர் விசாலமான அறிவும், நிலைமையை உள்வாங்கி, செய்திகளை எடுத்துணர்த்தும் கூர்மையும், சொல்ல வேண்டியதை "நச்'செனச் சொல்லும் கலை நேர்த்தியும், வருங்காலத்துக்குரிய ஒளிமிக்க சமூகப்பார்வையும், உண்மையைத் துணிந்து சொல்லும் மனவலிமையும் கொண்டவராக இருக்க வேண்டும்.

நல்ல கேலிச்சித்திரக்காரருக்கு பாரபட்சம் எதுவும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. பொது சமூக முன்னேற்றுத்துக்காக தன் மனதில் பட்டதை பட்டபடி அவர் வெளிப்படுத்த வேண்டும். சமூக மனதில் பாயும்படி வெளிப்படுத்த வேண்டும். இது மிகவும் ஆபத்தான பணி. மக்கள் மகிழ்வார்கள், போற்றுவார்கள். ஆனால் அதிகார பீடங்களின் கடுமையான எதிர்ப்புகளை, பழிவாங்குதல்களை அவர் சந்திக்க வேண்டிய சூழல் வரும். அப்படிச் சந்திக்கச் சந்திக்க அந்தக் கேலிச் சித்திரகாரர் மேலும் மேலும் எழுச்சியும், வீரியமும் பெறுவார், சுடச்சுடத் துலங்கும் தங்கம் போல. அவருடைய படைப்புகளின் மீது சமூகத்தின் கவனம் அதிகமாகும்.

தினமணியின் நீண்டகால வாசகனாகிய எனக்கு, மதியின் கேலிச் சித்திரங்கள் ரொம்பவும் பிடிக்கும். தமிழ்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து, உலகப் பிரச்சினைகள் வரை உய்த்துணர்ந்து, சித்திரமாக வரைந்து, மக்களுக்கு தெளிவு கொடுக்கும் அவருடைய ஆற்றல் என்னைக் கவரும். தினமணியைக் கையில் எடுத்தவுடன், முதற்பக்கக் கொட்டை எழுத்துகளும், அவற்றைத் தொடர்ந்து வரும் பெரிய எழுத்துச் சிறிய வரிகளும் என் கண்களை விழுங்கும். அவற்றிலிருந்து விடுபட்டதும், நான் முதலில் தேடுவது மதியின் ""அடடே'' பகுதியைத் தான். சில வேளைகளில் முதல் பக்கத்தில் ""மதியின் கார்ட்டூன்கள் உள்ளே'', என ஒரு அறிவிப்பு இருக்கும். உடனேயே என் விரல்கள் பக்கங்களைப் புரட்டத் தொடங்கி விடும். அங்கே பெரிய மனிதர்களின் சிறிய செயல்கள் கேலி செய்யப்பட்டிருக்கும். கட்சிகளின் கோணத்தனங்கள் கிழிகிழியென கிழிக்கப்பட்டிருக்கும். அந்தக் கட்சி இந்தக் கட்சி என்றில்லாமல், தவறு இருக்கும் இடங்களிளெல்லாம் மதியின் கார்ட்டூன்கள் பாயும். நமக்கு தெளிவுகள் ஏற்படும்.

நம் மக்களில் இன்னும் பாதி பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆகவே தினமணி செய்யும் பணியில் கணிசமான ஒரு பங்கை மதியின் கார்ட்டூன்கள் செய்கின்றன. சில வேளைகளில் இவருடைய சித்திரங்கள் தம் எல்லைகளைச் சுருக்கி கொள்கின்றனவோ என மனதில் எரிச்சல் வரும். இன்று சொல்ல வேண்டிய விஷயம் வேறு அல்லவா என்ற குடைச்சல்கூட வரும். ஆனால் மறுநாள் மதியின் சித்திரம் நம் எரிச்சலையும் குடைச்சலையும் தாண்டி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

ஆர்.கே. லக்ஷ்மணின் கார்ட்டூன்களைப் போல மதியின் கார்ட்டூன்களும் பல தொகுப்புகளாக வந்து கொண்டிருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகளின் தேர்ந்த பதிவுகளாக அவை நம்மை விழிப்படைய, வியப்படைய வைக்கின்றன.

இன்றைய சமூக வாழ்வின் முக்கியமான அம்சம் அரசியல். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற பாரதியின் வாக்கு இன்று மேலும் மேலும் உண்மையாகிக் கொண்டு வருகிறது. ஆனால் இந்த மன்னர்களில் பெரும்பாலோர் தாங்கள் மன்னர்கள் என்பதை இன்றும் புரிந்து கொள்ளாதவர்களாக, இருளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். பசியறியாத இன்னும் சிலரோ, நமக்குச் சோறு இருக்கிறது, ஒதுங்க ஒரு கூரை இருக்கிறது, யார் ஆண்டால் என்ன என இன்னொரு விதத்தில் மிதப்பில் திரிகிறார்கள்.

நம் ஜனநாயகம் முதிர்ச்சியடைய வேண்டும். எல்லோரும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இன்று தமிழகத்தில் மக்களை விழிப்படையச் செய்ய "மதி' தன் கார்ட்டூனின் மூலம் இதய சுத்தியோடும், துணிச்சலோடும் பணியாற்றி வருகிறார். சமூகப் பிரக்ஞையுள்ள அந்தக் கலைஞரை மனமார வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

- பொன்னீலன்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

×

தமிழ்நாட்டின் பெருமை


ஏதாவது ஒரு முக்கிய அரசியல் பிரச்னை குறித்து கட்டுரை எழுதும்பொழுது நான் சொல்ல விரும்பும் பல கருத்துகளை ஆதாரபூர்வமாக விளக்க பெருமுயற்சிகளை நான் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் அதே பிரச்னை குறித்த கருத்தை ஓவியர் மதி அவர்கள் மிக எளிதாகவும் மிகச் சுருக்கமாகவும் தனது கேலிச் சித்திரத்தில் கொண்டு வந்து விடுவதைக் கண்டு நான் பிரமிப்புடன் பார்த்து இரசித்து மகிழ்ந்து இருக்கிறேன். விரிவான கட்டுரையின் மூலம் வாசகர்களிடம் நான் ஏற்படுத்த விரும்பும் விளைவுகளை அவர் ஒரே ஒரு கேலிச்சித்திரத்தின் மூலம் சாதித்து விடுகிறார் என்பதை ஒப்புக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

1950களில் இந்தியா முழுமையும் அறிந்திருந்த கேலிச்சித்திரக்காரர் சங்கர் ஆவார். பல்வேறு பத்திரிகைகளில் கேலிச்சித்திரங்களை வரைந்து மக்களிடம் பெருமளவில் பாராட்டுக்களைப் பெற்ற அவர் தனது பெயரிலேயே சங்கர்ஸ் வீக்லி என்ற வார இதழ் ஒன்றைத் தொடங்கினார். சங்கர்ஸ் வீக்லி என்ற அந்த வார இதழ் முழுமையாக கேலிச்சித்திரங்களினால் நிறைக்கப்பட்டு இருந்தது. அதன் முதல் இதழை அன்றையப் பிரதமர் சவகர்லால் நேரு வெளியிட்டார். அந்த விழாவுக்கு துணைப் பிரதமர் சர்தார் வல்லபபாய் பட்டேல் தலைமை தாங்கினார். இதழை வெளியிடும் கட்டம் வந்தபோது ஓவியர் சங்கர் முதல் இதழை எடுத்து பிரதமர் நேருவிடமும் துணைப் பிரதமர் வல்லபபாய் பட்டேலிடமும் நீட்டினார். இதழின் அட்டைப் படத்தை பார்த்த இரு தலைவர்களும் ஒரு கணம் திகைத்தனர். மறுகணம் வாய்விட்டுச் சிரித்தனர். அப்படி என்னதான் அந்த அட்டைப் படத்தில் வரையப்பட்டு இருந்தது? நேருவும் பட்டேலும் ஒருவரோடு ஒருவர் அன்புடன் கட்டி அணைக்கின்றனர். ஆனால் அவரவர்கள் முதுகுப் பக்கம் மற்றவரின் கரத்தில் கத்தி நீட்டிக் கொண்டிருந்தது. நேரு - பட்டேல் ஆகியோருக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு அனைவரும் அறிந்த ஒன்று. அதை மிகவும் நளினமாகவும் நாகரிகமாகவும் சங்கர் சுட்டிக்காட்டியிருந்தார். அட்டைப் படத்தில் இத்தகைய கேலிச் சித்திரத்தை வெளியிட்டுவிட்டு அதை வெளியிட அந்த இரு தலைவர்களையுமே அழைத்திருந்தது அவரது துணிவுக்கு எடுத்துக்காட்டு. தங்களையே கேலி செய்யும் இதழை மனம் உவந்து வெளியிட முன்வந்த அந்த இரண்டு தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். சங்கரின் திறமையைப் பாராட்டி நேருவே அவருக்குக் கடிதமும் எழுதினார். அந்த நாளில் வாழ்ந்த பத்திரிகையாளர்களும், அவர்களின் பத்திரிகைகளில் ஆட்சியில் உள்ளவர்களைக் கேலி செய்து சித்திரங்கள் தீட்டிய ஓவியர்களும் எல்லாவற்றுக்கும் மேலாக தங்களை விமர்சித்தவர்களைக் கண்டு கோபப்படாமல் புன்னகையுடன் இரசித்த தலைவர்களும் அன்று இருந்தார்கள்.

இடைப்பட்ட காலத்தில் மும்பையில் ஆர்.கே. இலட்சுமணன் என்ற புகழ்பெற்ற ஓவியர் இருந்தார். அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் நாட்டையே குலுக்கின.

ஆட்சிப் பொறுப்பில் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் தலைவரின் கருத்தை நையாண்டி செய்யும் விதமாக கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளதை அந்தத் தலைவரே பார்க்க நேரும்போது தங்களையே அறியாமல் சிரிக்க வைப்பதுதான் உண்மையான கேலிச்சித்திரத்துக்கு உரிய இலக்கணமாகும். அந்த இலக்கணத்தை முற்றிலுமாகக் கற்றுத் தேர்ந்தவர் ஓவியர் மதி என்று சொன்னால் அது மிகையாகாது.

"தினமணி' நாளிதழின் வாசகர்கள் பத்திரிகையைப் பிரித்தவுடன் தேடுவது மதியின் கேலிச்சித்திரத்தைதான். அந்த அளவுக்கு படித்தவர்-பாமரர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களையும் அவரது கைவண்ணம் ஈர்த்து இருக்கிறது.

சர்வதேச அரசியலிலிருந்து தமிழக அரசியல் வரை அவரது தூரிகைக்குத் தப்பிய முக்கிய பிரச்சினைகளோ முக்கியத் தலைவர்களோ அரிதினும் அரிதாகவே இருப்பார்கள். தூரிகையின் துணை கொண்டு மக்களைக் கவர்ந்து சிரிக்க வைத்து அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதில் இவருக்கு நிகர் இவரேதான். சங்கர், ஆர்.கே. இலட்சுமணனைப் போன்ற அகில இந்திய புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர்களுக்கு வாரிசாக ஆண்டிலும் அனுபவத்திலும் இளைஞரான மதி விளங்குவது தமிழ்நாட்டுக்குப் பெருமையாகும்.

ஆங்கில நாளேடுகளில் கேலிச்சித்திரங்கள் வரைந்தால் இந்தியா முழுவதும் இவர் புகழ் பரவும். வரும்படியும் அதிகமாக கிடைக்கும். ஆனால் தமிழ் நாளிதழ்களில் பணியாற்றத் துணிந்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் கூறியிருக்கும் விடை என் மனதைத் தொட்டது. "ஒரு கேலிச்சித்திரத்தின் பணியே நகைச்சுவையை வரவழைப்பது மட்டுமல்ல படிக்காத பாமரனுக்கும் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சினைகள், அதற்கான அடிப்படைக் காரணங்கள், அவர்களுக்குப் புரியும்படி எளிதாகப் போய்ச் சேரவேண்டும் என்பதுதான். ஆங்கிலம் என்பது முழுமையாக அடித்தட்டு மக்களுக்குச் சென்று அடையாத நிலையில் கேலிச்சித்திரங்கள் தமிழில் வெளிவருவதே தகுந்த பலனைத் தரும். அதைத் தாய்மொழியில் சொல்வதே எளிதானதும் சுவாரசியமானதும் ஆகும். அதுவும் நமது வீட்டில் தொடங்கி மாநில பிரச்னைகள், தேசிய பிரச்னைகள், சர்வதேசப் பிரச்னைகள் வரை எல்லாவற்றிலும் தமிழில் கார்ட்டூன் வரைவதே எனக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது' என அவர் கூறியிருப்பது அவர் சிறந்த ஓவியர் மட்டுமல்ல சிறந்த தமிழர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தனது "இந்தியா' பத்திரிகையின் மூலம் முதன்முதலில் கேலிச்சித்திரங்களை வெளியிட்டவர் பாரதி. அவருக்கு தான் பேரன் என்பதை மதி இதன்மூலம் நிரூபித்து இருக்கிறார்.

மதியின் கேலிச்சித்திரங்கள் பல அரசியல் தலைவர்களை கோபம் அடைய வைத்தாலும் சில நேரங்களில் அவர்களைச் சிந்திக்கவும் வைத்துள்ளது என்பதை நான் அறிவேன். யார் மனமும் புண்படாமலும் - அதே வேளையில் இடித்துரைக்கும் வகையிலும் தம் கருத்தை உணர்த்துவதில் அவர் வல்லவராகத் திகழ்கிறார் என்பதை மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனில் வெளியான பத்திரிகைகளில் வந்த முக்கியமான கேலிச்சித்திரங்கள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் இட்லர் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று ஐரோப்பா முழுமையுமே தனது காலடியின் கீழ் கொண்டு வந்த பிறகு, பிரிட்டன் மீது அவர் தொடுத்த ஈவு இரக்கமற்ற போரில் தாய்நாட்டைக் காக்கவேண்டும் என்ற உணர்வோடு அந்த மக்களை விழித்து எழ வைத்து போராட வைத்ததில் அந்த கேலிச்சித்திரங்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதற்கு அந்த நூல் சாட்சியமாகத் திகழ்கிறது. அவை கேலிச்சித்திரங்கள் அல்ல. மாறாக தோல்வி மனப்பான்மையிலிருந்து மக்களை மீட்டெடுத்து வெற்றியை நோக்கி வீறுநடை போட வைத்த சித்திரங்கள் என்பதை அந்த நூலைப் பார்க்கும் யாராக இருந்தாலும் உணர்வார்கள்.

அதைப்போல தமிழகத்தில் இலஞ்சமும் ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் பண்பாட்டுச் சீரழிவுகளும் மலிந்து கிடக்கும் இந்த வேளையில் ஓவியர் மதியின் கேலிச்சித்திரங்கள் பெரும் சமூக விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த உணர்வுடன் "மதி கார்ட்டூன்ஸ்' என்ற இந்த நூலை தமிழகம் வரவேற்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் விழிப்புணர்வு மலர உதவ வேண்டும்.

- பழ. நெடுமாறன்
மூத்த அரசியல் தலைவர், தலைவர், தமிழ் தேசியப் பேரவை.

×

எப்போதும் விழித்திருக்கிறார்


மனிதர்களின் செயல்பாடுகளை அறியச் செய்வதும் விமர்சனம் செய்வதும்தான் கார்ட்டூன். அதில் சொல்வதும் - சொல்லாமல் விடுவதும் அதிகமான கவனம் பெறுகின்றன. அதன் காரணமாகவே கார்ட்டூனை தினசரி பத்திரிகைகள் வெளியிடுகின்றன.

கார்ட்டூன் கேலி சித்திரம் இல்லை. அது கருத்து படமும் கிடையாது. அது சமூகம், அரசியல், கலாசார அம்சங்கள் என்று பலவற்றோடு சேர்ந்து இருப்பது; சொல்லப்படாத அம்சத்தைத் தன்னளவில் ஒவ்வொருவரையும் சொல்ல வைப்பது. அதன் காரணமாகவே, கார்ட்டூன் பிரக்ஞையுடன் இருக்கிறது. கார்ட்டூன் தினசரி பத்திரிகைகளில் வெளிவருகிறது என்பதால் பழசாகி போவதில்லை. அது ஒரு கலைஞன் பார்வையில் தனித்தன்மை மிளிர சொல்லப்படுகிறது என்பதால், எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கிறது. சமூக, அரசியல் விமர்சனத்தில் சித்திரமும் எழுத்துக்களும் கொண்ட கார்ட்டூன் மிக முக்கியமான கருத்து, விமர்சனம் போன்றே மதிப்புற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கார்ட்டூன் சக்தி, வலு என்பதை முதன் முதலாக அறிந்து கொண்டவர் மகாகவி பாரதியார். அவர் தன் "இந்தியா' பத்திரிகையில் கார்ட்டூன் வெளியிட்டு விமர்சனத்திற்காக கதவுகளை அகலத் திறந்து வைத்தார். ஆனால் அவர் சித்திரக்காரரோ, அரசியல் விமர்சனரோ இல்லை. ஆனால் சமூக பிரக்ஞை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கலைஞன். அவனிடம் சொல்ல - விமர்சிக்க ஏராளமான அம்சங்கள் உள்ளன என்பதுதான் முக்கியம். அதனை பாரதியார் அறிந்திருந்தார்.

மதி இருபதாண்டுகளுக்கு மேலாக கார்ட்டூன் வரைந்து வருகிறார். கார்ட்டூன் சரித்திரம் சார்ந்ததா? அரசியல், சமூகம் சார்ந்ததா என்றால் - இரண்டுந்தான். சித்திரத்தின் தனித்தன்மை - கருத்தின் மீதான துணிவான விமர்சனம் - ஆகிய இரண்டும் சேர்ந்து போகிறது. கார்ட்டூன் பார்க்கிறவர்களை - படிக்கிறவர்களை வெகுவாகவே பாதிக்கிறது. அந்தப் பாதிப்புதான் கார்ட்டூன் வரைவதின் நோக்கம். வெளியிடுவதின் அர்த்தம்.

மதியின் கார்ட்டூன்களில் காலம் என்பது தொடர்ந்து வருகிறது; காலம் என்பது மக்கள். அதிகாரம், பணம் என்று அலைகின்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்களை - அவர்கள் செயல்பாடுகளை எளிய மக்கள் ஞானமும் சீல வாழ்க்கையும் கொண்டொழுகும் மக்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதுதான். அந்த மதிப்பீட்டை மதியின் குறுக்கு நெடுக்கான கோடுகள்; வளைந்தும் நெளிந்து போகும் கருப்புக் கோடுகள், கோடுகளில் உருவாகும் வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து சொன்னதற்கும் - சொல்லாமல் விட்டதற்கும் அர்த்தம் கொடுக்கிறது. அதுதான் மதி. அவர் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்பதையே அவர் கார்ட்டூன்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

- சா. கந்தசாமி
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

×

தமிழ் வாசகர்கள் மனங்களில் மதி!


தன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் சமூகத் தீமைகளுக்கு எதிரான தார்மிக ஆவேசத்தை நான்கு கோடுகளில் நச்சென்று வெளிப்படுத்தும் வித்தகர் மதி. ஓர் ஓவியனுக்கு அழகுணர்ச்சியும் கற்பனை வளமும் இருந்தால் போதும். ஆனால், ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு தன் வாழ்காலச் சமூகத்தில் அரங்கேறும் அவலங்கள் குறித்த பார்வையும், அவற்றிற்கு எதிரான உள்ளார்ந்த கோபமும், அந்த அடக்கவியலாத கோபத்தை எள்ளல் சுவையோடு வெளிப்படுத்தும் ஆற்றலும் அவசியம். இவையனைத்தும் கார்ட்டூனிஸ்ட் மதியிடம் இயல்பாக அமைந்திருப்பதை "தினமணி' வாசகர்கள் அறிவர்.
"இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் சங்கர் 14 ஆண்டுகள் வரைந்த கார்ட்டூன்களும், ஆர்.கே. லக்ஷ்மண் "டைம்ஸ் ஆப் இந்தியா'வில் 50 ஆண்டுகளுக்கு மேல் தீட்டிய சித்திரங்களும் ஆங்கிலம் அறிந்த வாசகர்கள் நெஞ்சங்களில் ஆழப் பதிந்தன. அவர்களுடைய பாதையில் தொடர்ந்து அடிச்சுவடு பதித்த அபு ஆப்ரஹாம், ரங்காவை யார் மறக்கக் கூடும்? அந்த வழியில் இன்று தமிழ் வாசகர்களின் மனங்களில் தனி நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அரிய கலைஞர் மதி.
சங்கர் 1948-இல் கார்ட்டூன்களுக்கென்றே முதன் முதலாக "சங்கர்ஸ் வீக்லி' தொடங்கிய காலச் சூழல் வேறு. அன்று பொதுவாழ்வில் காந்தியப் பண்பு நலன்கள் ஓரளவாவது பராமரிக்கப்பட்டதும், தலைவர்கள் சமூக நலன் சார்ந்து செயற்பட்டதும் இன்று பொய்யாய், பழங்கதையாய், கனவாய்ப் போய்விட்டன. பிரதமர் நேருவைக் கூட அன்று கடுமையாக விமர்சனம் செய்ய ஜனநாயக தர்மம் அனுமதித்தது. ‘ Don’t spare me Shankar’ என்று சிரித்தபடி சொன்ன நேருவைப் போன்று இன்று யாரை நம்மால் பார்க்க முடியும்?
சகிப்புத் தன்மையற்ற தொட்டாற் சுருங்கித் தனமும், சுயநலமாகவே சிந்தித்துச் செயற்படும் மலினமான மனப்போக்கும்,நேர்மையின் நிறம் மாறாமல் விமர்சிப்பவரை வஞ்சகமாக வீழ்த்த நினைக்கும் நபும்சகத்தனமும் நிறைந்த போலி மனிதர்களின் பொய் முகங்களைத் தோலுரிக்கத் தூரிகை ஏந்தி தனது கார்ட்டூன்கள் மூலம் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி வரும் மதி எப்போதும் என் ஆராதனைக்குரிய மனிதர்.

- தமிழருவி மணியன்
தலைவர், காந்திய மக்கள் கட்சி

×

சுருதி சுத்தம்


அந்த காலத்திலே பிரிட்டனில் "டேவிட் லோ' என்ற உலக மகா கார்ட்டூனிஸ்ட் இருந்தார். அவர் போன்ற கார்ட்டூனிஸ்டு இனி பிறக்கப் போவதில்லை. "லோ'வின் கார்ட்டூனின் பாணியின் தாக்கத்தால், உலகில் உருவான கார்ட்டூனிஸ்டுகள் பலர். நம் நாட்டிலும் அதன் தாக்கத்தால் பல கார்ட்டூனிஸ்டுகள் உருவானார்கள். அதற்கு அடுத்த தலைமுறை கார்ட்டூனிஸ்டுகள் பலர் பலவித புது முயற்சிகள் செய்யலானார்கள்.

அந்த பரம்பரையில் உருவானவரே நமது கார்ட்டூனிஸ்டு "மதி' அவர்கள். "மதி' ஒரு முழுமையான அரசியல் கார்ட்டூனிஸ்ட். காலையிலிருந்து மாலைக்குள் மறுநாள் தினசரிக்கு தேவையான கார்ட்டூனை யோசித்து, கருத்தை ஒருமுகப்படுத்தி புதிய கோணத்தில் ஹாஸ்யம் ததும்பக் கருத்தைப் படமாய்ச் சித்திரித்து அளிக்க வேண்டும். அறுசுவை ருசியுடன் கார்ட்டூன் வெளியிட வேண்டும், நான்கு சதுரத்துக்குள்ளே இத்தகைய கார்ட்டூனைத் தயார் செய்வதில் "மதி'யின் மதி அபாரம்! பிசிறு இல்லாமல் சுருதி சுத்தமாக இருக்கிறது அவர் வரையும் படங்கள்! வருடம் முழுவதும் அதிஅற்புதமான கார்ட்டூன்களை தினமணி நாளேட்டிலே அதிஅற்புதமாய் வெளியிட்டு வருகிறார்.

ஆங்கிலத்தில் கார்ட்டூன் போட்டால் ஆங்கில அறிவு பெற்றவர்கள் கொளுத்திய கற்பூரம் போல் உடனே புரிந்து கொள்வார்கள். தமிழில் கார்ட்டூன் போட்டால், வாசகர்கள் தோளில் கை போட்டு அழைத்துக்கொண்டு போனால்தான் புரிந்து கொள்வார்கள். நமது தமிழ் வாசகர்கள் மட்டம் என்று சொல்லவில்லை. கார்ட்டூன் கருத்து புரிய சிறிது தாமதமாகும். ஆனால், நமது "மதி'யில் கார்ட்டூன்கள் கற்பூரம் போல் உடனே புரியவைக்கிறார்.

இதுவரை பல புத்தகத் தொகுப்புகளை "மதி' வெளிக்கொணர்ந்துவிட்டார். இன்று அவற்றைப் பார்த்தாலும் திகட்டா விருந்து. பல ஆண்டுகள் அரசியல் நிகழ்ச்சிகளைப் படம்பிடித்து, ஹாஸ்யம் ததும்பக் கார்ட்டூன் மூலமாய் எல்லாக் காலத்திலும், எல்லோரும் பார்த்து ரசித்து சிரிக்க இவரது கார்ட்டூன் களஞ்சியங்கள் அற்புதம். ‘மதி' அவர்களின் பார்வையில் அகப்படாத அரசியல், சமூக, கோமாளித்தனமான நிகழ்ச்சிகளே இல்லை. ஒரு நாளா, இரண்டு நாளா? வருஷக்கணக்கில் கார்ட்டூன்களை வரைந்து தள்ளியுள்ளார். ஒவ்வொரு கார்ட்டூனுமே அட்சர லட்சம் பெறும்.




- கோபுலு கார்ட்டூனிஸ்ட்,
பிரபல ஓவியர்

×

Healthy Tamasha!


Ever-jovial Mathi looks somewhat swollen all over, but never have I seen him swollen-headed! His rapidly growing fame has not gone to his head! He has no use for the pompous poses assumed by some fellow-cartoonists who walk and talk as if they were special handiworks of the gods. Mathi is a genial friend to anyone who cares to cultivate him. His adoring fans find him an open book pervaded by his special brand of fun and humour. He does not mystify his talent. He says he enjoys watching the world and so he gets his unending stream of ideas for his work.

One or two of his cartoons out of 10, may not quite click but all the rest are surefire entertainers.The common folk who people his cartoons remind you of the specimens you are familiar with in your immediate world. The most striking feature of the miniature portraits of men and women in confabulation, is the deceptively easy-to-draw characters whose state of mind and emotion are clearly etched by a few deft strokes picturing their face and posture.

Mathi has few parallels in the area of capsule cartoons in Tamil Nadu or even all over India.

Though this Book of Cartoons by Mathi is a sumptuous feast, it will only whet our appetite for more of such publications.

The healthy Tamasha of each of these cartoons reflects with good humoured sympathy various aspects of our current familial and social lives-- These sensitive snap-shots are pleasantly concocted extensions to scenes in our day-to-day living. They offend nobody--merely portray the human comedy witnessed all around. The cartoonist never tries to deliver ponderous messages to erring humanity. He simply highlights the ridiculous within our family life and out in the streets.

The enjoyment of these cartoons leaves the reader with a sense of ease and peace that he belongs to the interesting species called `man'.

Mathi's cartoons succeed in giving us the satisfaction that the people around us are no different from ourselves. This generates greater tolerance of our own foibles as well as theirs. We curse ourselves no more. We cheerfully accept ourselves as we are--warts and all! and our hatred for others is effectively spiked.

Above all, one can't fail to be tickled by the delectable localisms in the one-liners quoted below the cartoon panel.

Thousands of Mathi fans would like to meet & shake hands with him in gratitude for the delightful moments he brings them every morning. Be merrily on, with your jolly work, Mathi!

Thanu,
Cartoonist, Founder, Brilliant Tutorials.

×

மதி, ஒரு (வி)சித்திரக்காரர்


கார்ட்டூன் என்பதை முதலில் "விகடச் சித்திரம்' என்றனர். தொடர்ந்து "கேலிச் சித்திரம்', "விளக்கப் படம்', "கருத்துப் படம்' என்று கூறுகிறார்கள். உண்மையில் சொல்லப் போனால் கார்ட்டூன் என்பதற்கு சரியான அர்த்தத்துடன் கூடிய நல்ல தமிழ்ச் சொல் விரைவில் கொடுக்கப்பட வேண்டும். 1906-ல் மகாகவி பாரதிதான் தமிழில் கேலிச் சித்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார். ரூ.45 கோடி பணத்தை வெளிநாட்டவர் கொண்டு சென்றதை அவர் ஒரு கேலிச் சித்திரம் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தினார். ஆனால் இப்போது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டவர்கள் அதை பல்லாயிரம் கோடி அளவுக்கு ஊழல்களாக மாற்றிவிட்டனர் என்பதை "மதி'யின் சித்திரங்களைப் பார்த்தால் புரிகிறது.

மதி தன்னுடைய கார்ட்டூனில் பொதுஜனம் என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். அந்தப் பொதுஜனத்தின் தோற்றம் அற்புதம் என்றால் அதற்கு மதி கொடுத்திருக்கும் விளக்கமோ அதிஅற்புதம்! அவரது தலைப்பாகை - அவர் ஒரு சாமானியர்; அவரது வழுக்கை தலை - அவரது அனுபவம்; அவருடைய மீசை - அவர் இன்னும் சோர்வடைந்துவிடவில்லை; அவரது ஒட்டுப்போட்ட சட்டை - இந்த தேசத்தின் பொருளாதாரம்; அவரது தேய்ந்து போன செருப்பு - அவரது அயராத உழைப்பு; அவரது குடை - அவருக்கு உற்ற துணை... என்று அவரது தலைப்பாகையில் ஆரம்பித்து செருப்பு வரை ஒவ்வொன்றும் எதைக் குறிக்கிறது என்று விளக்கியுள்ளார். இவ்வாறாக அவரது தோற்றமும், நடையும், உடையும், குடையும் பார்ப்பவர் மனதைச் சுண்டி இழுக்கிறது!

வறுமை, வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல், சாதிப் பூசல்கள், மதவாத மோதல்கள், நாடாளுமன்றக் கூச்சல்கள்... என்று நம்மிடையே இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் ஒன்றைக்கூட விட்டு வைக்காமல் சித்திரங்களாக வரைந்து தள்ளுகிறார் மதி. ஒவ்வொரு சித்திரமும் நம்மிடையே ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்துக்காக ஒரு சித்திரத்தை மட்டும் இங்கு சொல்கிறேன். ஒருமுறை மதுரையில் இடைத்தேர்தல் நடந்தபோது "ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி..! போற்றி..!' என்ற தலைப்பில் இன்று நாடு இருக்கும் நிலையை பார்த்து அவரது பொதுஜனம் கோபமும், வேதனையும் கொப்பளிக்க பேசுவதுபோல ஒரு சித்திரம் படைத்திருந்தார். மதுரைவாசியான எனக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அந்த பொற்றாமரை குளத்தின் படிகளில் உட்கார்ந்து பேசும் அவரது பொதுஜனம் நானேதான், நான் தான் அப்படி புலம்பித் தீர்க்கிறேன் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது.

மண்ணில் மாற்றத்தை உருவாக்க அவர் வரைந்து வரும் சித்திரங்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனதில் நிலைத்து நிற்பவை. அவரது சித்திரங்களைப் பார்க்கும்போது அவை நம்மை சிரிக்க வைக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன. மதி ஒரு சித்திரக்காரர் அல்ல, அவர் ஒரு விசித்திரக்காரர்.



- சாலமன் பாப்பையா பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர்

×

A hidden treasure


Mathi is a hidden treasure. A household name in one corner of India, he really belongs to all languages and all countries because of the directness of his lines and the folk wisdom of his ideas. There are many examples of the way he combines originality with simplicity. Let me site my favourite: A young woman sits in glamorous clothes on one side and another in tattered clothes, the captions saying ''Miss India'' and ''Mrs India''. There are Mathi masterpieces that ought to be in any collection cartoons of the world. This does not happen because Mathi is confined to Tamil. I trust his new website will make up for this unfair linguistic limitation and take him to the world. That's where he belongs.


-T.J.S. George
Padmabhushan award winner. Writer, columnist. Journalist

×

‘மதி’ நுட்பம்


படம் போடத் தெரிந்தவர்கள் கார்ட்டூனிஸ்ட் ஆகி விட முடியாது. இன்னும் கேட்டால் தேவையான நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்ள முடியும்! சிலருக்குத் திடீரென்று (H2+O= தண்ணீர் மாதிரி!) நகைச்சுவை உணர்வும், படம் வரையும் திறமையும் ஒருங்கிணைந்து வெளிப்பட்டு விடுகிறது. பலருக்கு "அணுக்கள்' (Atoms) கரெக்டாக இணையாமல் தனித்தனியாக "வேஸ்ட்' ஆகப் போய் விடுகிறது.

மற்றபடியும் கார்ட்டூனிஸ்ட்டுக்கு பல பிரச்சினைகள் உண்டு. மற்ற பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கலந்தாலோசிக்கலாம், செய்திக்கு "தலைப்புகள்' தந்து உதவிக் கொள்ளலாம். கார்ட்டூனிஸ்ட், காட்டில் ஒரு புலி தனியாக உலவுவதுபோல தானேதான் எல்லாவற்றிலும் (வேட்டையில்!) பொறுப்பேற்க வேண்டும்! உதாரணமாக, ஒரே பிரச்னைக்குப் பல ஐடியாக்கள் தோன்றலாம். அதை தேர்ந்தெடுப்பவரும் அவரே! எந்த "ஆங்கிளில்' படம் வரையலாம் என்று முடிவு கட்ட வேண்டியதும் அவரே! ஏடாகூடமாக எதையாவது கார்ட்டூன் போட்டு பத்திரிகை ஆசிரியரை ஜெயிலுக்குப் போக வைக்காமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கார்ட்டூனிஸ்ட்டுக்கு உண்டு! ஆனால் ஒன்று. வாசகர்கள் செய்திகளை படிக்கிறார்களோ இல்லையோ கார்ட்டூனைப் பார்க்காத வாசகர் இருக்க முடியாது. அத்தனை சிரமத்தையும் ஈடுகட்ட இந்த ஒன்று போதுமில்லையா?!

தமிழ்நாட்டில், எந்தவொரு காலகட்டத்திலும் கார்ட்டூனிஸ்டுகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருக்கிறார்கள். இதை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் ஒரு திகில் உணர்வு ஏற்படுவதுண்டு. ஆகவேதான் புதிதாக ஒரு கார்ட்டூனிஸ்ட் பிறக்கும்போதெல்லாம் "அப்பாடா' என்று மனசுக்குள் ஒரு நிம்மதி ஏற்படும். "பிறக்கும்போதே' என்று நான் குறிப்பிட்டது உண்மை. கார்ட்டூனிஸ்ட்டுக்கான திறமை பிறக்கும்போதே வந்துவிடுகிறது என்பதைத் திடமாக நம்புகிறவன் நான். மூளைக்குள் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் திறமை அது- கரிக்குள் வைரம் மாதிரி.

என்னைப் போலவே "மதி'க்கும் கார்ட்டூன் வரையும் ஆர்வமும் திறமையும் கல்லூரி காலத்திலேயே வெளிப்பட்டுவிட்டது என்பது எனக்குத் தெரியும். விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் கார்ட்டூனிஸ்டுகளுக்காக ஒரு தனித் தேர்வு கிடையாது என்றாலும் மதி அத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பக்கம்பக்கமாக அவர் கிறுக்கியிருந்த படங்களைப் பார்த்தவுடனே "இதோ, இன்னொரு கார்ட்டூனிஸ்ட்!' என்று மனதில் ஒரு சிலிர்ப்பு தோன்ற அதை அவரிடமும் சொன்னேன். "நல்ல பத்திரிகையில் உங்களது கார்ட்டூன்கள் வரவேண்டுமே' என்ற எனது கவலையையும் அவரிடம் சொன்னது நினைவிருக்கிறது. பிற்பாடு பாரம்பரியமிக்க "தினமணி'யில் அவர் கார்ட்டூனிஸ்ட்டாக சேர்ந்ததும் எனது மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தேன்!

பக்குவமடைய அடைய, கார்ட்டூனிஸ்ட் "அரசியல் தலைவர்'களை வரையும்போது அதில் உள்ள இளக்காரம் அதிகமாகும். மதியின் அரசியல்வாதிகள் பொதுவாக, பொய்யான சிரிப்புடனும் (இளிப்பு?!), காமிராவுக்கான Body language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்! மதியின் கார்ட்டூன்களை புரட்டிப் பார்க்கும்போது நம் நாட்டு அரசியல் எவ்வளவு தமாஷாகவும், விபரீதமாகவும், பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது என்பதும் புரியும்!

×

மதிநுட்பம் வாய்ந்த கலைஞன்


மதியின் சிந்தனைச் சித்திரங்களுடன் எனக்கு பல ஆண்டுகளாகவே பழக்கம். அவரை நன்கறிவேன். இதுவரை அவரைச் சந்தித்ததில்லை.

சிந்தனைச் சித்திரம் என்பது வெறுமனே கிச்சுக்கிச்சு மூட்டிச் சிரிக்க வைக்கும், பிரச்னையை மறக்கச் செய்யும், சிந்தனையை மழுங்கடிக்கும் சங்கதியல்ல. பெரிய / சிறிய திரைகளை ஆக்கிரமித்திருக்கும் கொச்சையான, வக்கிரம் நிறைந்த நகைச்சுவைக் காட்சிகளல்ல. அது சமூகப் பொறுப்புள்ள அறச்சீற்றத்தின் கலை வெளிப்பாடு. ஓவியனின் மனசுக்குள் கட்டமையும் காட்சிப் படிமங்களை தூரிகையும் எழுதுகோலும் இணைந்து நடுநிலையுடன் உருவாக்கும் உன்னதப் படைப்பு.

சிந்தனைச் சித்திரம் படைக்கும் ஓவியன் பன்னாட்டு நிலவரங்களை அவதானிப்பவனாக, சொந்த நாட்டு / மாநில அரசியல் போக்குகளை, மக்களின் பிரச்னைகளை, பண்பாட்டுச் சீரழிவுகளை நன்கறிந்த, நன்குணர்ந்த, மதிநுட்பம் வாய்ந்த கலைஞனாக இருக்கணும்.

ஓவியர் மதிக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு. அவரது சித்திரங்களில் தனித்துவமும் அழகியலும் விரவிக் கிடக்கின்றன. அவை பிற ஓவியர்களை நினைவுபடுத்துவதில்லை. சாதி, மதம், அரசியல், ஊழல், வன்முறை என சகல அசிங்கங்களும் சங்கமிக்கும் சாக்கடைக்குள் நாடே மூழ்கிக் கிடக்கிறது. அரசியல்வாதிகளின் தாண்டவக் கூத்தால் அது அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. எத்தனை வராகமூர்த்திகள் அவதரித்தாலும் அதைக் காப்பாற்றி மீட்டெடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.

வாரிசு அரசியல் பூதாகரமாக உருவெடுத்து முடை நாற்றமடிக்கிறது. ஊழல்கள் மலிந்து அச்சுறுத்துகின்றன. சந்தர்ப்பத்துக்கேற்ப நிலைபாட்டை மாற்றிக்கொண்டு தனது அணியின் கருத்துகளை ஆணித்தரமாக நிலைநாட்டும் கோமாளிப் பட்டிமன்றங்களாகிவிட்டன நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும்.

வெள்ளுடை தரித்த வேந்தர்கள் மீது ஈழத் தமிழர்களின் ரத்தக் கவுச்சியடிக்கிறது. அந்தக் கறைகளோடுதான் வாக்குப் பொறுக்கிப் பிழைப்பு நடத்துகிறார்கள். நனையும் ஆடுகளுக்காக ஊளையிடும் ஓநாய்களாக உலவுகிறார்கள்.

நாடே தள்ளாடி நொண்டுகிறது. சுதேசிகளாக, பிச்சைக்காரர்களாவது எஞ்சுவார்களா என்பது சந்தேகந்தான். கடந்த அறுபது ஆண்டுகளில் தேசியக் கொடியைச் சூழ்ந்து கொண்டு பல கட்சிக் கொடிகள் வளர்ந்துவிட்டன. இந்த வளர்ச்சி விகிதம் மகத்தானது.

பல அரசியல்வாதிகளுக்கு கிழடு தட்டிவிட்டது. அவர்களை முதுமக்கள் தாழியில் வைத்தும் புதைத்தால்தான் சரிப்படும். தாழிகளை வாங்குவதில் ஊழல் புகுந்து விடாமல் பார்த்துக் கொள்ளணும். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ மாலையும் கையுமாக வரும் நாசகாரக் கும்பலை ""ஒழுங்கா'' என்று கைக்கம்பால் விரட்டியடிக்க ஒரு காந்தி போதாது.

எட்ட நின்று யானைத் தோலில் ஊசியை எறிந்து நோய்க்குரிய மருந்தைச் செலுத்துவார்கள். நாடெங்கும் நடமாடும் பகல் கொள்ளைக்காரர்களுக்கு யானை வைத்தியம் சரிப்படாது. அவர்களுக்கு தேகம் ரெம்பத் தடித்துவிட்டதே.

- பூமணி
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

×

பொக்கிஷம்


அநேகமாக நாமெல்லோரும் காலை எழுந்தவுடன் முதலில் படிக்கும் அச்சுப் பிரதி நாளிதழ்களாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைய நாளிதழ்களை எவரும் மகிழ்ச்சி ததும்பும் மனதோடு வாசித்து முடிக்க இயலாது. அதற்குக் காரணம் நாளிதழ்கள் அல்ல, அவற்றில் வரும் செய்திகள். அண்மைக் காலத்தில், எந்த ஒரு பத்து நாள் செய்தித்தாள்களையும் எடுத்துப் பாருங்கள். சந்தர்ப்பவாத அரசியல், வன்முறைகள், மதவாத மோதல்கள், சாதிப் பூசல்கள், தாராளமயப் பொருளாதாரத்தின் பின் விளைவுகள், அரசியல் படுகொலைகள், அரசின் அத்துமீறல்கள், காவல்துறையின் அடக்கு முறைகள், கல்வித்துறைக் குழப்பங்கள், நீதிமன்றத் தாமதங்கள், அரசு இயந்திரத்தின் அலட்சியப் போக்கு, வறட்சி, வெள்ளம், வேலை நிறுத்தங்கள், சாலை விபத்துகள், இரயில் கவிழ்ப்புகள், இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோதான் முக்கியச் செய்திகளாக இடம் பெற்றிருக்கும். இவற்றைப் படித்துவிட்டு எப்படிப் புன்னகையுடன் அந்த நாளைத் துவக்கமுடியும்?

"இடுக்கண் வருங்கால் நகுக' என்று வள்ளுவர் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரே, அது நிஜமாகவே நடைமுறையில் சாத்தியமா என்று பலர் கேட்கிறார்கள். அது சாத்தியம்தான் என்று ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார் ஒருவர். அவர் மதி. தினமணி வாசகர்களை சிரிக்க வைத்தே தீர்வது, அவர்கள் நாளிதழை மூடிவைக்கும்போது முகம் மலரச் செய்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு உழைத்து வருகிறார் இவர். எதை வேண்டுமானாலும் நையாண்டி செய்து சிரிக்க வைத்து விடலாம். அது எளிதான காரியம் இல்லை என்றாலும், அதைத் தமிழில் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதழ்கள் சிரித்து முடித்த பின், இதயம் அந்தக் கருத்துப்படத்தைத் தன்னுள் வாங்கிக் கொண்டு மனதை சிந்திக்கத் தூண்டுகிறதே அந்த அனுபவம் மதியிடம் மட்டுமே சாத்தியம். செய்தித்தாளை வாசித்து முடித்து, மடக்கிக் கீழே போட்டுவிட்டு குளிக்கப் போவேன்; மதியின் சித்திரம் மறுபடியும் மனதில் வந்து என்னைச் சிந்தனை நதிக்கு இழுத்துப் போவது எத்தனேயோ நாள் நடந்திருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஜவஹர்லால் நேரு கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டு கம்பீரமாக நடை போடுகிறார். முகத்தில் லேசாகக் கவலைக் குறிகள். பக்கத்திலேயே ஒரு படம். கொரில்லா போல பார்க்கவே பயங்கரமான ஓர் உருவம். அதன் கையில் அஞ்சிச் சுருண்டு கிடக்கும் ஒரு குழந்தை மனிதன். நேருவின் கையில் இருந்த குழந்தைக்கு நாட்டின் பிரச்சினைகள் என்று பெயரிடுகிறார் மதி. அடுத்தப் படத்தில் அந்த கொரில்லாதான் நாட்டின் பிரச்சினைகள். அதன் கையில் சுருண்டு கிடக்கும் குழந்தையோ, பிரதமர் (குஜ்ரால்!). அதாவது ஒரு காலத்தில் நாட்டின் பிரதமர் பிரச்சினைகளை வழிநடத்த முடிந்தது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்குள் நிலைமை தலைகீழ். பிரச்சினைகள்தான் பிரதமரை வழி நடத்துகின்றன! இந்தியாவின் தலைமைப் பிரச்சினையை எவ்வளவு கூர்மையாக, தெளிவாகச் சொல்லிவிட்டார் மதி! இந்தக் கார்ட்டூனுக்குள் இந்தியாவின் தலைமைப் பிரச்சினை மட்டுமல்ல, ஐம்பதாண்டு கால அரசியல் வரலாறும் ஒளிந்து கிடக்கிறது. நாளிதழ்களைப் பார்த்துச் செய்திகளைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் நாளிதழ்களைப் பார்த்து வரலாற்றையும் அசைபோடலாம் என்று காட்டியவர் மதி.

பாரதியின் நகைச்சுவை, புதுமைப்பித்தனின் நையாண்டி இவற்றின் பின்னர் ஆறாத கோபம் இருக்கும். எப்படிக் கோபமும் நகைச்சுவையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் வெளிப்பட முடியும் என சந்தேகம் இருப்பவர்கள், மதியின் கார்ட்டூன்களைப் பார்க்க வேண்டும். ஒருவர் நல்ல கார்ட்டூனிஸ்டாகத் திகழ வேண்டுமானால் இந்தக் கோபமும் வேண்டும், நகைச்சுவையும் வேண்டும், தகவலறிவும் வேண்டும். தனக்கென ஒரு பார்வையும் வேண்டும். செய்தி அறைக்குள்ளிருந்து மக்களையும், மக்களோடிருந்து அரசியலையும் பார்க்கும் கண் வேண்டும். மதிக்கு இவை எல்லாமும் இருக்கின்றன.

தமிழ் நாளிதழ்களின் வரலாறு நூறாண்டுகளுக்கு மேற்பட்டது என்ற போதிலும், ஏனோ அண்டை மாநிலமான கேரளம் அளவிற்குத் தமிழ்நாட்டில் கார்ட்டூனிஸ்ட்கள் உருவாகவில்லை. தமிழ்ச் சூழலில் மதி ஒரு பொக்கிஷம். அவரைச் செழுமைப்படுத்திப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமை. அது பாரதியார் ஆரம்பித்து வைத்த பத்திரிகை உத்திக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

- மாலன்
எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆசிரியர்
‘புதிய தலைமுறை’.

×

‘மதி’ க்கு வேலை கொடுக்கும் மதி!


தினமணியை படிப்பவர்களின் மதிக்கு தினமும் வேலை கொடுக்கும்படியான கேலிச் சித்திரங்களை வழங்கி வருபவர் கார்ட்டூனிஸ்ட் மதி. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணனின் "சாதாரண மனிதன்' ஏற்படுத்தும் தாக்கத்திற்குச் சற்றும் குறையாத வகையில் மதி அவர்களின் சித்திரப் பாத்திரங்கள் ஏற்படுத்துகிறார்கள். கார்ட்டூன் என்பது வெறும் சித்திரமல்ல. போடுவது எளிமையானதுமல்ல. கேலிச் சித்திரத்தில் ஒரு தத்துவத்தையே அடக்குவது; புண்படுத்தாத வகையில் மனத்தைப் பண்படுத்துவது. குழம்பிய மனங்களுக்கு வெளிச்சத்தைக் காண்பிப்பது. பாசாங்குத்தனத்தின் பொய்முகத்தை அகற்றுவது. அரசியல் போலித்தனத்தை சிரிப்புமூட்டி தோலுரிப்பது. வலுவான தலையங்கங்களை விட மனத்தில் ஆழமாகப் பதியும் ஆற்றல் கொண்டவை.நாள் முழுவதும் யோசித்தாலும் பல சமயங்களில் ஒரு சின்னக் கார்ட்டூனுக்கு விஷயம் கிடைக்காது. வாசகர் கண்ணைச் சுண்டி மனத்தை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் வரைய வேண்டுமானால் கார்ட்டூனிஸ்ட் அந்த அளவுக்கு விசாலப் பார்வையும் நகைச்சுவை உணர்வும் கொண்டவராக இருந்தால்தான் சாத்தியம். மதி அந்தத் தகுதிகளை உடையவராக இருப்பதால்தான் சளைக்காத வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

- வாஸந்தி
எழுத்தாளர், பத்திரிகையாளர், முன்னாள் ஆசிரியர் இந்தியா டுடே (தமிழ்)

×

நானும் மதியின் ரசிகன்


புண்படுத்தாமல் பண்படுத்துவது!
தினமணியை படிப்பவர்களின் மதிக்கு தினமும் வேலை கொடுக்கும்படியான கேலிச் சித்திரங்களை வழங்கி வருபவர் கார்ட்டூனிஸ்ட் மதி. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணனின் "சாதாரண மனிதன்' ஏற்படுத்தும் தாக்கத்திற்குச் சற்றும் குறையாத வகையில் மதி அவர்களின் சித்திரப் பாத்திரங்கள் ஏற்படுத்துகிறார்கள். கார்ட்டூன் என்பது வெறும் சித்திரமல்ல. போடுவது எளிமையானதுமல்ல. கேலிச் சித்திரத்தில் ஒரு தத்துவத்தையே அடக்குவது; புண்படுத்தாத வகையில் மனத்தைப் பண்படுத்துவது. குழம்பிய மனங்களுக்கு வெளிச்சத்தைக் காண்பிப்பது. பாசாங்குத்தனத்தின் பொய்முகத்தை அகற்றுவது. அரசியல் போலித்தனத்தை சிரிப்புமூட்டி தோலுரிப்பது. நாள் முழுவதும் யோசித்தாலும் பல சமயங்களில் ஒரு சின்னக் கார்ட்டூனுக்கு விஷயம் கிடைக்காது. வாசகர் கண்ணைச் சுண்டி மனத்தை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் வரைய வேண்டுமானால் கார்ட்டூனிஸ்ட் அந்த அளவுக்கு விசாலப் பார்வையும் நகைச்சுவை உணர்வும் கொண்டவராக இருந்தால்தான் சாத்தியம். மதி அந்தத் தகுதிகளை உடையவராக இருப்பதால்தான் சளைக்காத வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
- வாஸந்தி

×

நிறைவான சித்திரங்கள்


நாளிதழில், வார இதழில் இடம்பெறக்கூடிய நீண்ட தலையங்கத்தைக் காட்டிலும் ஒரு கார்ட்டூன் "பளிச்'சென்று விஷயத்தைப் புரிய வைப்பதுடன் சுவாரஸ்யமாகவும் அமையும். இதனால்தான் தலையங்கப் பகுதியைப் படிக்காதவர்கள்கூட கார்ட்டூனைக் கவனிப்பார்கள். ஒரு பத்திரிகையில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதி பிடிக்கும். கார்ட்டூன் மட்டும் எல்லோருக்குமே பிடிக்கும்! இதை உணர்ந்திருந்ததால்தான் உலகத் தலைவர்கள் பலரும் கார்ட்டூனுக்கு முக்கியத்துவம் தந்தார்கள். சர்ச்சில் தம்மைப் பற்றிய கார்ட்டூன் ஒரிஜினலை டோவிட்லோவிடம் கேட்டு வாங்கி ஃபிரேம் போட்டுத் தமது காரியாலய அறையில் மாட்டி வைத்தார். நேருஜி குறித்து சங்கர் வரைந்த கார்ட்டூன்கள் கண்காட்சியாகவே அமைந்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றன.

ராஜாஜியின் மூக்கும் கைத்தடியும் கறுப்புக் கண்ணாடியும் கார்ட்டூன் உலகில் மிகப் பிரசித்தம். அவரே பின்நாள்களில் "சுயராஜ்யா' பத்திரிகையை மேற்பார்வையிட்டுவந்தபோது, வினு, தாணு போன்றவர்களுக்கு கார்ட்டூன் ஐடியாக்கள் கொடுத்து போடச் சொல்வார். வினு மரியாதை கருதி அப்படியே ஏற்றுக்கொள்வார். தாணு லேசில் ஒப்புக்கொள்ளமாட்டார். ""உங்க அரசியல் நோக்கு சரி, ஆனால் கார்ட்டூன் சரியாக அமையலை'' என்பார். புத்திசாலித்தனமான விவாதம் என்றால் ராஜாஜிக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் தாணுவிடம் அவருக்கு தனி பிரியம்! தமிழ்நாட்டில் கார்ட்டூன்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பயன்படுத்திய முதல் நபர் மகாகவி பாரதியாராகத்தான் இருக்கவேண்டும். அவர் அடிச்சுவட்டில் அமரர் கல்கி முதலில் "விமோசனம்' பத்திரிகையிலும் பிறகு "ஆனந்த விகடன்', "கல்கி' பத்திரிகைகளிலும் கார்ட்டூன்களுக்குச் சிறப்பிடம் அளித்தார்.

ஒரு கார்ட்டூனை ஒரு நிமிஷத்தில் பார்த்து, படித்து, ரசித்தும் விடலாம்; ஆனால் அதை உருவாக்க பல மணித்துளிகள் சிந்திக்க வேண்டும். என்ன செய்தி, அது பற்றிய நம் கருத்து என்ன என்ற இரு விஷயங்களும் தெரியும். ஆனால் இதற்கு எப்படி கார்ட்டூன் வடிவம் தருவது? இதற்குத்தான் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்! பலவாறு யோசித்து மூளையைக் கசக்கிக் கொண்டால் சின்னதாக ஒரு ஐடியா பளிச்சிடும். அப்புறம் அதை இரண்டு மூன்று விதமாக வரைந்து பார்த்து, ஒரு முடிவுக்கு வர, கார்ட்டூன் இறுதி வடிவம் பெறும்.

மதியின் கார்ட்டூனில் இடம்பெறுகிற நையாண்டிக்கலை ஒருபுறமிருக்க, அவர் வரைகிற கார்ட்டூன் சித்திரங்களே மிகவும் கவர்ச்சியானவை. குறைந்தபட்ச கோடுகளை - கனமான கோடுகளை - பயன்படுத்தி நிறைவான சித்திரங்கள் வரைகிறார். தேவையான இடங்களில் அளவாகக் கருப்பு வைத்து கார்ட்டூன் எடுப்பாக அமையவும் கவனத்தை ஈர்க்கவும் பண்ணுகிறார். முக பாவங்களைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். அரசியல் கார்ட்டூன்களில், விளக்க வார்த்தைகளை வளவளவென்று எழுத அவசியமின்றிக் குறைந்தபட்சமாக்குகிறார். "அடடே!' என்ற "பாக்கெட்' கார்ட்டூன்களில் அரசியல் தலைவர்களை ஒதுக்கிவிட்டு, அன்றாட அரசியல், சமுதாய நிகழ்வுகள் சராசரிக் குடும்பத்தினரை எப்படிப் பாதிக்கின்றன என்பதை உணர்த்துகிறார்.

மதியின் ஆற்றல் படிப்படியாக வளர்ந்து வருவதை ஆரம்பத்திலிருந்து பார்த்து வந்தவன் என்ற முறையில் அவருக்கு என் வாழ்த்துகளையும் நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மதியின் காலம் கார்ட்டூன் கலையின் பொற்காலமாகத் திகழட்டும்!அதே சமயம் நமது அரசியல்வாதிகளிடம் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கின்ற சகிப்புத்தன்மையும் வளரட்டும்!

- கல்கி ராஜேந்திரன்
முன்னாள் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர்,
கல்கி (வார இதழ்)

×

குறுநகையாக வெளிப்படுகிற அறச்சீற்றம்


கார்ட்டூன் என்றால் "கேலிச் சித்திரம்' என்று தமிழில் சொல்லப்படுகிறது. கார்ட்டூன், கலைகளின் உன்னதம். எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் பரப்புதான் எனது வாசிப்பு வட்டம்.

சின்ன வயதுகளில் தீக்கதிரில் வருகிற தி. வரதராசன் அவர்களின் கார்ட்டூனை ரசித்திருக்கிறேன். தீக்கதிரில் வாசித்தறிந்த அரசியல் செய்திகளை சாராம்சப்படுத்தி கார்ட்டூன் விளக்கி விடும். பக்கம் பக்கமான கட்டுரைகளை வாசித்து அறிய வேண்டிய அரிதான அறிவனுபவத்தை ருசிகரமான சுவாரஸ்யத்துடன் ஒரு கார்ட்டூன் வழங்கி விடும். அப்புறம், வெளி வட்டார வெகுஜன இதழ்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு, மதன் அவர்களின் ஆனந்த விகடன் கேலிச் சித்திரங்கள் என்னை வசீகரித்து பிரமிக்க வைத்தன. கற்பனையின் துள்ளல், புதுமை, ரத்தம் வராத தாக்குதலால் ஊமை விமர்சனம், நவீனமான காட்சிப் பிம்பங்கள் எல்லாமே என்னை வியக்க வைக்கும். விலாவாரியாக யோசிக்க வைக்கும்.

அதற்கப்புறம் மதியின் கார்ட்டூன்தான் என்னை வசீகரித்தது. மதி என்ற பெயரை ஓவியப்படுத்துகிற விதமே என்னை முதன்முதலாக கவனிக்க வைத்தது. அப்புறம் சின்னஞ்சிறு கார்ட்டூன்களில் பெத்தம் பெரிய பிரபஞ்சத்தை அடக்குகிற நேர்த்தி, ஆச்சரியப்படுத்தியது. மதி நெல்லைச் சீமைக்காரர். தெற்கத்திச் சீமை, தமிழ்நாட்டு வரைபடத்திலேயே கூர்மையான பகுதி. கூர்மையான அறிவுக்கும் சொந்தமான பகுதி. மகாகவிபாரதி, வ.உ.சி., புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், கு. அழகிரிசாமி, கி.ரா., காமராஜர், வைகோ, நேசமணி, நல்லகண்ணு, எத்தனை எத்தனை படைப்பாளிகள், தலைவர்கள், சரித்திர மாமனிதர்கள். தெற்கத்திச் சீமையின் மற்றொரு சீதனம், கார்ட்டூனிஸ்ட் மதி.

கேலிச் சித்திரம் என்பது வெறும் கேலி பண்ணுகிற ஓவியம் அல்ல. கீறிப் பிளந்து காயப் போடுகிற கூர்மையான கோடரி. அலசிப் பிழிந்து காயப் போடுகிற கார்ட்டூன், காயப் போடப்பட்டவரிடமே புன்னகையை வரவழைத்துவிடும். கோபப்பட வேண்டிய அளவுக்கு சீண்டப்பட்டாலும், கேலிச் சித்திரத்தின் அறிவார்ந்த நகைச்சுவை காரணமாக இளம் புன்னகையை பூக்க வைத்துவிடும்.

கார்ட்டூன் தொட்டுப் பார்க்கத் தக்க உயரத்துக்கு வந்துவிட்டது குறித்த பெருமிதத்தைக் கூட தந்துவிடும்.வசந்த காலத் திருவிழாவின்போது... யாரும் யாரையும் என்னமும் பண்ணலாம் என்ற கட்டற்ற சுதந்திரம் வழங்கப்படும் என்று "வால்கா முதல் கங்கை வரை' நூலில் ராகுல்ஜி எழுதியிருப்பார். கார்த்திகைத் திருநாள் மூன்று நாள் கொண்டாட்டம். தெற்கத்திச் சீமைகளில் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒட்டுப்புல்லை பந்து பந்தாக சேகரித்து உருட்டு உருட்டாக வைத்துக் கொண்டு "முறை'காரர்களை தேடித் திரிவார்கள்.

மாமன், மச்சான், மதினி, கொழுந்தியாள், கொழுந்தன் என்ற முறைகாரர்கள் தெருவில் பம்மி பம்மிப் பதுங்கி நடப்பார்கள். அப்பவும், ஒரு கடவுக்குள்ளிருந்து குபீரெனப் பாய்ந்து வந்து, தலைநிறைய ஒட்டுப் புல்லை "கற, கற'வென தேய்த்து விடுவார்கள். கோபமூட்டுகிற வன்முறைத் தாக்குதல் என்றாலும் கோபப்பட முடியாது. அசட்டுச் சிரிப்புதான் சிரிக்க வேண்டும். கொண்டாட்ட நாளின் விளையாட்டுச் சுதந்திரம், கேலி பண்ணுகிற பரிபூர்ண சுதந்திரம்.

மஞ்சள் நீர் ஊற்றுதல், ஹோலிப் பண்டிகையின் வண்ணப்பொடி தூவுதல் எல்லாம் இந்த வகைதான். தேசமெங்கும் பண்டிகைக் காலத்துக்கு மட்டுமான கேலி கிண்டல் விளையாட்டு. கார்ட்டூன், அனைத்து நாளுக்குமான கேலி கிண்டல், நையாண்டி விமர்சனச் சுதந்திரம்.

மகாகவி பாரதி நடத்திய "இந்தியா' இதழில் அரசியல் பூர்வமான நையாண்டி விமர்சனம் கொண்ட கார்ட்டூன் கலையை அறிமுகப்படுத்தினார்.

தமிழின் முதற் சிறுகதையாளர், முதற் புதுக் கவிஞர், முதல் ஹைக்கூக்காரர், இப்படி பலவற்றுக்கு துவக்கப் புள்ளியாக இருந்த மகாகவி, கார்ட்டூன் கலைக்கும் முதல்வராக இருந்தவர்.பல கலை இலக்கிய கங்கைகளை தோற்றுவித்த இமயமான மகாகவியே கார்ட்டூன் கங்கைக்கும் தோற்றுவாய்.

மதி, ஒரு கங்கையாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

தினமணி நாளிதழின் தனிச் சிறப்பான முகமாகவும், இதயக் குரலாகவும் இருப்பவை அவரது கேலிச் சித்திரம்.

ஜவகர்லால் நேரு கம்பீரமாக நடந்து போகிறார். அவரது கோட்டுப் பையில் "தேசியப் பிரச்னைகள்' எனும் குட்டிப் பிசாசு. 1947. 1997ல் "தேசீயப் பிரச்னைகள்' எனும் ராட்சசப் பிசாசு. அதன் பைக்குள் குட்டியாக பிரதமர்.

50 ஆண்டு கால இந்தியாவின் கருப்பு வரலாற்றை கூறி விடுகிறது கேலிச் சித்திரம். இது வெறும் கேலியா, கிண்டலா, சிரிப்பாணிக் கூத்துக்குரிய நையாண்டியா? இதையெல்லாம் தாண்டிய அறிவார்ந்த கூர்மையான விமர்சனமல்லவா!

மதிக்கு ஓவியத் திறமை இருக்கிறது. நகைச்சுவைத் திறன் இருக்கிறது. கற்பனைத் திறன் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் விட அதிமுக்கியமான விவேகமிக்க அரசியல் அறிவும் இருக்கிறது. தேசம், வளர்ச்சி, ஒழுக்கம், நாணயம், அரசியல் பண்பாடு குறித்து அக்கறை கொள்கிற அரசியல் ஞானம் இருக்கிறது.

சமாதானத் தூது இலை கவ்விய புறாவை இந்தியா பறக்க விடுகிறது. அதே புறா இலை கவ்விய நிலையில் ரோஸ்டாக வறுபட்டு தட்டில் நீட்டப்படுகிறது, பாகிஸ்தானால். உலக நிலவரத்தை உணர்த்துகிற கார்ட்டூன் இது.

ஒரு பெரும் புலி. அதன் வாயில் சமாதானத் தூதுக்குரிய இலை. அதற்கான தலைப்பு சைவப் புலி, எல்.டி.டி.இ. என்ற இங்கிலீஷ் எழுத்து.

எல்.டி.டி.இ. குறித்து, அதன் வன்முறை அரசியல் குறித்து, மதியின் விமர்சனம், 1990களில். இப்போதும் அந்த கார்ட்டூன் கடந்து போன காலத்தின் மீதான விமர்சன வரலாறாக நிற்கிறது.

காலம் காலாவதியாகும். வரலாறு, கடந்து போகும். அரசியல் மாறும். சமுதாய நிலவரம் முகம் மாறும். சமகாலம் குறித்த விமர்சனமாக வெளிப்படுகிற கேலிச் சித்திரம் நிலைத்து நிற்கும். கடந்த காலம் குறித்த தாட்சண்யமற்ற விமர்சனமாக கம்பீரம் பெறும்.

கொடிகளுடன் ஓடி வருகிற பக்தர் கூட்டம். அவர்களிடமிருந்து தப்பித்தோடுகிற பிள்ளையார், கடலை நோக்கி. ""எனக்கு ஒண்ணும் வேண்டாம். விட்ருங்க. அடிக்காதீங்க. தள்ளாதீங்க. நானே கடல்லே குதிச்சிடுறேன்'' என்று பயந்தோடுகிற பிள்ளையாரின் ஊர்வலம். விநாயகர் ஊர்வலம் என்கிற ஆன்மிக நடவடிக்கை, எத்தனை வெறிமிக்க வன்முறையாகிவிட்டது என்ற கால மாற்றத்தை கேலி செய்கிறது இந்தக் கார்ட்டூன்.

ரதத்தை இழுத்துச் செல்கிற அத்வானியும், வாஜ்பாயும், ரதத்துக்குள் ராமரல்ல. மாயாவதி. "ராமர் கோவில் முக்கியமல்ல இப்ப. கட்சி இமேஜை காப்பாத்துறதுதான் முக்கியம்' என்கிறார் அத்வானி. உ.பி. என்ற அடையாளம். பி.ஜே.பி. - மகாஜன் கட்சி கூட்டணி என்ற கொடி.

நாடு பூராவும் ரதத்தில் ராமர் வைத்து ஊர்வலம் வந்து வெறியூட்டியதுவும் பதவிச் சுகத்துக்காகத்தான். ராமருக்கு நிகராக மாயாவதியை சுமப்பதுவும் அதே பதவிச் சுகத்துக்காகத்தான் என்ற அரசியல் விமர்சனத்தை முன்வைக்கிற கார்ட்டூன். பி.ஜே.பி. எனும் கட்சியின் குணத்தை இதைவிடவும் எதுவும் அம்பலப்படுத்திவிட முடியாது.

"கழுதை தேய்ந்து கட்டெறும்பானது' என்றொரு பழமொழி உண்டு. அதை அப்படியே "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு' காட்சிப் படுத்துகிற கற்பனையும் நேர்த்தியும் பார்த்தவுடன் சிரிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கிறது. நெஞ்சில் வேரடித்து நிலைத்து விடுகிறது.

இந்தியாவின் ஜனத்தொகை பெருக்கம் 113 கோடி. இந்திய வரைபடத்தையே பெண்ணாக காட்சிப்படுத்தி, ஒட்டுப் போட்ட கந்தல் சேலை உடுத்திய கர்ப்பிணிப் பெண்ணாக வரைந்து காட்டிய அற்புதம். "ஊழல்' என்ற வார்த்தையிலுள்ள "உ'வையே பெரும் மலைப் பாம்பாக்கி, அதன் வாயில் விழுங்கப்படுகிற இந்தியாவை காட்சிப்படுத்திய கற்பனையின் கூர்மையான அரசியல் விமர்சனம்.

மதியின் கார்ட்டூனுக்கு நான் தீவிர ரசிகன். இதில் எனக்குப் பெருமிதம். ஏனெனில், மதியின் கார்ட்டூன்கள் இன்று பூத்து இன்றே வாடுகிற பூவல்ல. நிலைத்த வரலாறு. கார்ட்டூன் தொகுப்பை வரிசைப்படுத்திப் பார்த்தால், இந்திய வரலாறு விரிந்து படர்கிறது. இந்திய அரசியல் பரவிப் படர்கிறது. அரசியல் நிகழ்வுகள் நினைவுபடுத்தப்படுகின்றன. அறச்சீற்றம் குறுநகைகளாக வெளிப்படும்.

வரலாறாக கம்பீரம் பெறுகிற மதியின் கார்ட்டூன்கள் தொகுப்புகளாக வெளிவந்து, வரலாற்று நூல்கள் தருகிற ஞானத்தை விடவும் கூடுதலான அறிவைத் தர வேண்டும். தரும் வல்லமை மதிக்கு இருக்கிறது. வாழ்த்துகளுடன்.... என்றும் உங்கள்.

- மேலாண்மை பொன்னுசாமி
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்

×

கவிதைக்கு பாரதி – கார்ட்டூனுக்கு மதி


ஒவ்வொரு நாளும் காலை வேளையில் "தினமணி', இல்லம் வரும்போது உள்ளம் முதலில் தேடுவதும் பார்ப்பதும் அன்பு மதியின் கருத்துப்படம் இடம்பெற்றுள்ள முதல் பக்க இடப்புற மூலையும் நடுப்பக்க நெஞ்சப் பகுதியும்தான். சொல்லவரும் கருத்து, பார்க்கிறவர் அனைவர் நெஞ்சையும் உறைக்கும்விதமாகப் படங்களையும் அவற்றுடன் கூடிய இணைப்புரையையும் எழுதியிருப்பார். தமிழகம் முழுவதும் சென்றுவரும் எனக்கு நகரங்களிலும் ஊர்களிலும் சில சந்திப்புகள் அங்குள்ள கருத்து விரும்பிகளால் மிகப் பெரிய தட்டிகளில் எழுதி வெளியிடப்பெற்றுத் தொங்க விடப்பட்டிருக்கும். தமிழக அரசியலின் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தியதில் மதியின் கருத்துப் படங்களுக்கு முதன்மை இடம் உண்டு.

அடடே! பகுதி மிகச் சிறியதாக இடம் பெற்றிருந்தாலும் "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்பதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு அக்கருத்துப் படங்கள். படங்களில் இடம்பெற்றிருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இன்ன பிற அரசியல்வாதி உருவங்கள் சில எலி முதலான உயிரினப் படங்கள் பார்க்கும்போதே சிரிப்பை உண்டாக்கும். அவர் வரையும் சின்னஞ் சிறுவனின் படம், அவன் கேட்கும் கேள்வி, விமர்சனம் என்று தெரியாமலே அவர் செய்யும் விமர்சனம் நமக்குச் சிரிப்பை வரவழைப்பதுடன் சிந்தனையையும் ஆழமாகத் தூண்டும்.

பம்பாயிலிருந்து வெளிவந்த ‘Shankar’s weekly’ எனும் ஆங்கில ஏடு நகைச்சுவையாகக் கிண்டலடிப்பதில் மிகப் புகழ் பெற்றது. நேரு முதலான பெருந்தலைவர்களையும் சங்கர், தம் கருத்துப்படவழி கிண்டலடிப்பது மிகச் சுவையானது. இந்தியத் தேர்தல் முடிவுகளையே மாற்றும் ஆற்றலுடையது சங்கரின் கார்ட்டூன்கள். அவர்போலவே பம்பாயில் மிகப் புகழ் பெற்ற கருத்துப்பட மேதை ஆர்.கே. இலட்சுமன்ஆவார். சிறந்த ஆங்கில எழுத்தாளரான தமிழ்நாட்டுக்காரர் ஆர்.கே. நாராயணனின் உடன் பிறந்தார் அவர். ஆர்.கே. இலட்சுமணனின் கருத்துப் படங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளேட்டிற்குப் பெரும் புகழ் சேர்த்தவை. கருத்துப்படம் மட்டுமல்ல, அப்படத்தின் ஊடே எழுதியுள்ள வாசகம் எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

தமிழ்நாடும் சென்னையும் சாலைகளிலும் சந்திப்புகளிலும் 100 அடி, 120 அடி என்ற உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் வெட்டுருவங்களுக்கு (கட்-அவுட்) பெயர் பெற்றவை. இந்தியாவிலேயே இவ்வெட்டுருவங்கள் தமிழரின் விளம்பர மோகத்தை வெளிப்படுத்துகிறவை. ஆர்.கே. இலட்சுமன் கருத்துப்படம் ஒன்றில் பம்பாய் - சென்னை விமானத்தில் பக்கம் பக்கம் அமர்ந்துகொண்டு இருவர் பயணம் செய்கிறார்கள். ஜன்னலோரம் அமர்ந்துகொண்டு பயணம் செய்கிறவர் - "இதோ சென்னை வந்துவிட்டது'' என்று உரத்துச் சொல்லுகிறார் - "எப்படிச் சொல்லுகிறீர்கள்'' என்று கேட்கிறார் பக்கத்துப் பயணி. "அதோ பாருங்கள் சென்னை கட்-அவுட்டுகள் விமானத்தையே தொடும் அளவுக்குத் தெரிகின்றன. அவைதாம் அடையாளங்கள் சென்னை வந்துவிட்டதற்கு'' என்று சொல்லுகிறார். தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றுவதற்குச் சரியான எடுத்துக்காட்டு இக்கருத்துப் படம்.

இதோ தினமணி மதி வரைந்திருக்கிற கருத்துப் படங்களைப் பாருங்கள்.

பாரதப் பிரதமர் பண்டித நேரு உட்பட இந்தியப் பிரமுகர்கள் அத்தனை பேரையும் கிண்டல் தொணிக்கும் கருத்துப்படங்களால் பம்பாய் சங்கர் சங்கர்ஸ் வீக்லி வழியாக அரசியல், சமூகப் பொருளாதார மாற்றங்களை செய்தது போல மதி தம் கருத்துப் படங்களால் தினமணி நாளேடு வழிச் சாதித்திருக்கிறார் என்று அடித்துச் சொல்லலாம். "மதி கார்ட்டூன்ஸ்' என்ற பெயரில் உங்கள் கையில் தவழுகின்ற 348 பக்கங்களும் இக் கருத்தை கட்டியம் கூறி சத்தியம் செய்யும் தனிப்பெரும் சான்று. நம் பிரதமர் மன்மோகன் படம் வரைந்து முதுகுப்பக்கம் சோனியா என்று சாவியை வரைந்திருப்பதே சாட்சி.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறது என்று தமிழில் வழங்கும் பழமொழியை நினைவுப்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு காங்கிரஸைக் கிண்டலடித்திருக்கும் (பக்கம்: 33) படம் சான்று.

மதியினுடைய கார்ட்டூன் படங்கள் தமிழர் தமிழகம், இந்தியர் இந்தியா, மானுடர் உலகம் என முப்பெரும் எல்லையையும் தொட்டு நிற்கிறது.

தமிழ்நாட்டுக் கட் அவுட் கலாசாரத்தை பக்கம்: 34-இல் அவர் வரைந்திருக்கும் கருத்துப் படத்தைவிட வேறு விதமாக அதனினும் சிறந்த முறையில் வரைந்துவிட முடியாது. தமிழகத்தில் கள்ளி முளைத்து காடாகிக் கிடக்கும் நிலையை பக்கம்: 63-இல் படம் பிடிக்கிறார்.

உலகில் இந்தியாவைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இன்று இந்துமகா சமுத்திரம் எனப் பரந்து கிடப்பது ஊழல். வடக்கே காஷ்மீரிலும் ஊழல் மண்டிக் கிடக்கிறது. தெற்கே குமரி முனை வரை ஊழல் மண்டிக் கிடக்கிறது. இக்கருத்தை இந்திய வரைபடத்தை வரைந்து இந்தியா முழுதும் ஊழல் மண்டிக் கிடக்கிறது என்பதை பக்கம்: 79-இல் படம்பிடித்துக் காட்டுகிறார். சென்னை மாநகராட்சி அலுவலகம் கலைந்து குலைந்து கிடக்கிறது. உள்ளே நுழைந்த பாமரன் எதையோ தேடுகிறான். அங்கே வந்த ஒருவர்"என்னத்தைத் தேடுறீங்க' என்று கேட்கிறார்; அதற்கு அந்தப் பாமரன் ஜனநாயகம் என்று விடை அளிக்கிறான் பக்கம்: 101. எத்துணை தத்ரூபமான படப்பிடிப்பு.

மதியின் கைவண்ணத்தில் தமிழக அரசியல், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், சமுதாயம் முதலான அனைத்தும் அறிவுப்பூர்வமாக நம்மை உயர்த்தும் நோக்கில் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டுதோறும் நாம் சுதந்திர தினம் கொண்டாடுவதையும் பாரதமாதாவை வணங்கி வழிபடுவதையும் வானுயரப் பறக்கும் கொடிக்கம்பத்தை ஊழல் கொடிகள் பறக்கும் கம்பமாகவும் பாரதத்தாயைப் படுக்க வைத்து நோய்வாய்ப்பட்ட அவள் உடம்பை ஊழல் துணியால் போர்த்தி, சுற்றி நின்று பக்கம்: 195-இல் வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று கொண்டாடுகிறோமாம்.

தமிழக அரசியலில், ‘Rising Sun' என்பது ‘Rising son' என்றும் தொடர்ந்து ‘Rising Grandson' என்றும் பரிணமித்து வருவதை பக்கம்: 71 படம் பிடிக்கிறது.

இன்று தமிழகத்தைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கைக் கலவரம் இந்தியாவையே சுட்டெரிக்க வல்லது என (பக்கம்: 252) ஒரு படம் தில்லி அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டுகிறார். மணிக்கணக்கில் மேடையில் பேசியும் பக்கக் கணக்கில் ஏடுகளிலும் எழுதியும்கூட முற்றும் விளக்க முடியாத செய்திகளைக்கூட மதி தன் கருத்துப் படங்களால் ஓங்கி முழக்குகிறார்.

இந்நூலின் நிறைவுப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள அரசியல் அடையாள அட்டைகள் புதுப்புதுக் கருத்துப்படங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன.

மிகமிகப் புகழ்பெற்ற மதிக்கே உரிய வெகுஜன பாமரனை எல்லோருக்கும் தெரியும். வலக்கையில் ஒரு பை இடக்கையில் தலையைக் கவிழ்ந்து கொண்டிருக்கும் கிழிந்த குடை காலில் சாதாரண ஹவாய் செருப்பு, ஒட்டுப்போட்ட அரைக்கைச் சட்டை - இப்படத்தை ஒருமுறை சட்டையில் இடம்பெற வேண்டிய தையல் ஒட்டை ஓவியர் மதி வரைய மறந்துவிட்டார். படமும் அப்படியே இதழில் வெளிவந்துவிட்டது. அப்படத்தைப் பார்த்த நூற்றுக்கணக்கான வாசகர்கள் தொலைபேசியில் அழைத்து, திருவாளர் பொதுஜனம் பணக்காரர் ஆகிவிட்டாரா கிழிந்த சட்டைக்குப் பதிலாக ஒட்டுப்போடாத நல்ல சட்டையைப் போட்டுள்ளாரே என்று கேள்விகள் கேட்டுத் துளைத்து விட்டனராம். அதே கேள்விகள் கேட்டுக் கடிதங்கள் வேறு. இந்நிகழ்ச்சி ஒன்றே போதும் ஓவியர் மதியை அவர் வரையும் கருத்துப் படங்களை ஓராயிரம் வாசகர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான வாசகர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள், கருத்துப்படங்களை வெட்டிச் சேர்த்து வைக்கிறார்கள்.

ஓவியர் மதி தமிழுக்குக் கிடைத்த வரம். தமிழர்க்குக் கிடைத்த வரப்பிரசாதம். அவர் கைவண்ணங்களால் தமிழ் கவுரவம் பெறுகிறது. தமிழ் இதழுலகம் பெருமை எய்துகிறது. அவர் படங்கள் இன்னும் வரட்டும், இன்னபிற மொழிகளிலும் வரட்டும். இன்னபிற நாடுகளிலும் வரட்டும்.



க.ப. அறவாணன்
எழுத்தாளர், முன்னாள் துணை வேந்தர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்

×

இதோ நம்முடைய மதி!


50 ஆண்டுகளுக்கு முன்னர் "சங்கர்ஸ் வீகிலி' என்ற தனது பத்திரிக்கையில், நேருவை கிண்டலடித்து அட்டையில் கார்ட்டூன் போட்டு நேருவைக் கொண்டே, அவ்விதழை வெளியிடச் செய்த சூரர் - கார்ட்டூனிஸ்ட் சங்கர்.

இந்தியாவின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மண். அந்த வரிசையில் தாணு, ஸ்ரீதர், மதன் போன்றவர்கள் வழியில் இதோ நம்முடைய மதி! "தினமணி' - பிரித்ததும் அவர் கார்ட்டூனைத்தான் முதலில் பார்ப்பேன். 15 ஆண்டுகளுக்கு மேலாக "தினமணி'க்கு அழகு சேர்ப்பவை அவரது கார்ட்டூன்கள்... இதோ இன்று அவை புத்தக வடிவில் நம் கைகளில்...

* நாத்திகம் என்ற பெயரில் அன்று பெரியார் பிள்ளையார் சிலைகளை தெருவில் போட்டு உடைத்தார்.இன்று இந்த ஆத்திகர்களோ, ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்று கடலில் போட்டு, காலால் மிதித்து, கல்லால் அடித்து, மூங்கில் கம்பால் மூச்சு முட்ட தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்கிறார்கள். "ஆளை விடுங்கடா சாமி, நானே கடல்ல குதிச்சிடறேன்' என்று பிள்ளையார், கடலை நோக்கி புலிப் பாய்ச்சல் பாய்வது அற்புதம் (பக்கம் 31).

* குடிப் பழக்கத்தால் மரணம் சம்பவிக்கும் என்ற எச்சரிக்கையை, பாட்டில்களைக் கொண்டே மண்டை ஓட்டை வரைந்திருப்பது அருமை (பக்கம் 306).

*இந்தியாவில் வயதான அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வி.ஆர்.எஸ். கொடுத்து அனுப்பும் ஐடியா சூப்பர் (பக்கம் 25).

* கையிலும், வயிற்றிலும், காலடியிலும் குழந்தைகளைச் சுமக்கும் ஏழைத் தாய்க்கு ஙதந. ஐசஈஐஅ பட்டம் தரலாம் என்று அழகு போட்டியைக் கிண்டலடித்தது அழகு (பக்கம் 23).

* இந்தியா மேப்புக்கு அடியில் இருக்கும் இலங்கை பற்றி எரிந்தால் அது இந்தியாவுக்கு பேராபத்தாக முடியும் என்று எச்சரிக்கை செய்வது (பக்கம் 252).

* வெள்ளையனை எதிர்த்து "வந்தே மாதரம்' சொன்ன காங்கிரஸ், திமுக காலடியில் அமர்ந்து "தந்தே தீரணும்' என்று பிச்சை கேட்பது (பக்கம் 251).

* மின்வெட்டு தொடர்ந்தால் அரிகேன் விளக்கே புகலிடம் (பக்கம் 244).

* இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு உறவுக்கான முயற்சி அமைதிப் புறா பறக்காமல் ஆமையாகி நகர்வது போன்றது (பக்கம் 175).

* அன்னிய முதலீட்டுக்கு மொத்த இந்தியாவும் விலை போகப் போகிறது என்று எச்சரிக்கும் படம் (பக்கம் 164).

* கருநாக பாம்பாக படமெடுத்துச் சீறும் சாதிக் கொடுமைகளை சின்னக் கீரிப்பிள்ளை போன்ற அரசு முயற்சிகளால் அடக்க முடியுமா? (பக்கம் 148)

* சோனியாவின் சாவி கொடுத்த பொம்மை மன்மோகன் சிங் (அட்டை).

* தமிழ்நாடு காங்கிரஸ் வளர்ச்சி! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை (அட்டைப் படம்).

* தமிழக அமைச்சரவையிலிருந்து ஒரு குப்பைக் கூடை! அது நிறைய தூக்கியெறியப்பட்ட அமைச்சர்கள் - சோக முகத்துடன் (அட்டை).

* நேரு முதல் மன்மோகன் சிங் வரை ஆட்சி மாறினாலும் கோஷம் மாறவில்லை. இந்தியா - 60 கார்ட்டூன் (பக்கம் 257).

* நாட்டு நடப்பை அப்பட்டமாகத் தோலுரித்துக்காட்டும் - ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி போற்றி (பக்கம் 254-255).

அன்பு மதி!
வாழ்க நீவிர் பல்லாண்டு
வளர்க உங்கள் நகைச்சுவை உணர்வும் கலையும்'.

- சிவகுமார்
ஓவியர்,
பேச்சாளர்,
நாடக மற்றும் திரைப்பட நடிகர்.

×

A Real Genius


Mathi is too well known a Cartoonist whose cartoons continue to delight the readers. He is able to express himself without hurting anyone. Mathi through the medium of cartoons conveys, without indulging in criticism, very significant messages/ advice for people in positions of authority and power to correct themselves. It is a marvel to see how skillfully he achieves this objective by his cartoons. He may not realize that by his art he is serving as a political and social reformer. His contribution to the society is immense. He has originality and his cartoons display a vast variety and freshness. He is really a genius in the art and science of cartoons.

I am sure that he will continue to work with the same fervour and brilliance and excel in this field for several decades.

Naresh Gupta, IAS (retd.)
Former Chief Electoral Officer, Tamilnadu.
[Presently Member, Central Administrative Tribunal]

×

அன்று சாக்கியார் கூத்து! இன்று கார்ட்டூன்!


மிகப்பெரிய செய்தியை சுருங்கச் சொல்லும் கார்ட்டூனை நான் அதிகம் விரும்பி ரசிப்பதுண்டு. அரசியல், பொதுமக்கள் பற்றிய கருத்தை, நகைச்சுவை உணர்வுடன், சிந்திக்க வைக்கக்கூடிய முறையில் சொல்லும் ஓர் அருமையான கருவி கார்ட்டூன். அதை மதி அவர்கள் திறமையுடன் கையாண்டு வருகிறார். அவரது கார்ட்டூன்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் பலரது முகபாவங்களை, அவர்களுடைய தனித்தன்மையை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். கருத்து, உணர்ச்சி வெளிப்பாடு, தகவல் இவையுடன் நகைச்சுவையும் அவருடைய கார்ட்டூனில் வெளிப்படுவதை நன்றாக ரசிக்க முடிகிறது.

பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழகத்தில், சாக்கியார் கூத்து என்ற நாடகக்கலை புகழ் பெற்றிருந்தது. அக்கூத்தில், நாட்டு நடப்புகளும், உள்ளூர் விவகாரங்களும், சமூக வம்புகளும், இடம்பெற்றிருக்கும். அங்கு சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களுடைய நிகழ்ச்சிகளும் இலைமறைவு காய்மறைவாக கையாளப்படும். தனிமனிதனின் தவறுகளும், பலவீனங்களும் விமர்சிக்கப்படும். நையாண்டியாகவும், யாரையும் புண்படுத்தாமலும் விமர்சனம் செய்து கூட்டத்தினருக்கு நகைச்சுவை விருந்து படைப்பார்களாம். அக்கூத்திற்கு அந்நாட்டு அரசர் மாறுவேடத்திலும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் வந்து விமர்சனங்களைக் கேட்டுத் தங்கள் தவறைப் புரிந்துகொண்டு திருத்திக் கொள்வார்களாம். கார்ட்டூனைப் பார்க்கும்போது காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியார் அவர்கள் மேற்கூறியவை என் நினைவுக்கு வரும். விமர்சனங்கள் தொன்று தொட்டு இருந்தாலும் அவை காலத்திற்கு ஏற்ப பரிமாணங்கள் மாறி, இன்று கார்ட்டூன்களாகவும் வெளிவருகின்றன.

அதுபோல் இன்றைய சூழலில் நடைமுறையில் இருக்கின்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகின்ற கார்ட்டூனிற்கு ஓவியத் திறமையோடு சம்பவங்களை சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும். மதியின் கார்ட்டூன்களில் இத்திறமை மிக இயற்கையாக அமைந்திருக்கிறது! மேலும் இவரது கார்ட்டூன்களின் தொகுப்புகள் தொடர்ச்சியாக புத்தக வடிவில் வருவது அந்தக் காலகட்டத்தைப் பதிவு செய்வதல்லாமல் இளம் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கும், இளம் ஓவியர்களுக்கும் அவர்களுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும்.

- மணியம் செல்வன்
பிரபல ஓவியர்

×

சிக்கிக் கொண்டவரும் சிரிப்பார்...


மகத்துவமும் மனிதத்துவமும் கொண்டவை மதியின் கார்ட்டூன்கள். அவரது கேலிச்சித்திரங்களில் சிக்கியவர்களும் அதைப் பார்த்து சிரித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு நகைச்சுவையும், எதார்த்தமும் கொண்டவை அவை. ஒருகாலத்தில் சில ஆங்கில நாளிதழ்களை அவ்வழியே போகிறவர்கள் எட்டிப்பார்த்து கேலிச்சித்திரத்தை மட்டும் காட்டச்சொல்லி ரசித்துவிட்டு நகர்வார்கள். அதைப்போல மயக்கக்கூடிய வசீகரம் கொண்டது அவருடைய மேதமை.

கோட்டுச் சித்திரமானாலும் அதில் ஓவியத்தின் நுட்பத்தையும், வரையப்படுபவரின் சாமுத்ரிகா லட்சணங்களையும் உள்ளடக்கி அழியாத சுவரோவியத்தைப் போல மாற்றும் திறன் திரு. மதி அவர்களுக்கு உண்டு. அரசியல் கலக்காத அவருடைய கார்ட்டூன்களும் ரசிக்கத் தகுந்தவை. அழகிப் போட்டிகள் குறித்து அவர் தீட்டியுள்ள கார்ட்டூன்கள் அனைத்துமே அழகானவை. அந்த கார்ட்டூன்களில் அழகிப் போட்டியில் கலந்திருக்கும் அரசியலை பூடகமாக வெளிப்படுத்துகிறார். இந்தியாவின் நிஜ முகமும், வெளியே காட்டுகின்ற முகமும் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்பதை அது தெளிவாக உணர்த்துகிறது. அழகிய முகம் போலியானது. அழுகிய முகமே நிஜமானது என்பது அவரது வாதம்.

கேலிச்சித்திரம் என்பது தத்துவார்த்த அடிப்படையிலும், உறுதியான கொள்கைப் பிடிப்பின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டால்தான் நடுநிலைமையுடன் இருக்க முடியும். அவையே காலத்தைத் தாண்டி வெல்ல முடியும். அது உண்மை என்று இந்த கார்ட்டூன்கள் உறுதியளித்துள்ளன.

இந்தியா எடுக்கும் அமைதி முயற்சிகள் பாகிஸ்தானால் எப்படி முறியடிக்கப்படுகின்றன என்பதை அமைதிப்புறா வறுவல் புறாவாக திரும்பி வருவதைக் காட்டி உணர்த்துகிறார். வெறும் கணினிமயத்தால் எந்தப் பயனும் இல்லை என்பது அவருடைய சித்திரம் உணர்த்தும் சுடும் உண்மை. பிள்ளையார் தாமே கடலில் குதிக்க ஓடுவதைப் போன்ற சித்திரம் பகுத்தறிவு கொண்ட காட்சிப்படுத்துதல்.

ஒரு நல்ல கார்ட்டூன், பார்த்தவுடன் சிரிக்கச் செய்கிறது. மிகச்சிறந்த கார்ட்டூன் எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்க வைப்பது. மதியின் கார்ட்டூன்கள் எப்போது பார்த்தாலும் நம் முகத்தில் புன்முறுவலை வரவைப்பது. அவருக்கு இருக்கும் சமூக அக்கறை, புகை பிடிப்பவர்கள் பற்றிய கல்லறை குறித்த கார்ட்டூனில் வெளிப்படுகிறது. விலங்குகள் மீது இருக்கும் விருப்பம் மனித உயிர்களை மலிவாகக் கருதக்கூடாது என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். விளையாட்டு, அரசியல், ஊழல் போன்ற பலவற்றை அவருடைய உன்னிப்பான பார்வை உரசிச் செல்கிறது.

இவை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களும் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. அவர் தொடர்ந்து இயங்கவும் நாம் தொடர்ந்து சிரிக்கவும் வாழ்த்துகள்.

- வெ.இறையன்பு IAS,
எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர்

×

Make you laugh, Make you think


I received a telephone call from Mr. Mathi @ Mathikumar saying that he would be creating a website, for which he would like to have a write up from me about him and his cartoons.

I have met Mathi only a few years back but have been keenly watching his cartoons for over a number of years without knowing who he was. My impression, therefore, about him was on the basis of the cartoons which were being regularly published in 'Dinamani'. Ever since, the first thing I used to look in ''Dinamani'' was for Mathi's cartoon. How I got convinced with him during the first meeting was that he was a true professional and that his cartoons were born out of personal conviction and not a 'paid one'. A real cartoonist is one who can draw a cartoon at your cost and still make you laugh and be happy. Mathi belongs to this category. It is an extraordinary and delightful art. Unlike a musician or an actor, a cartoonist must have a taste and knowledge of the subject so that he can easily study and come up to the highest level. What all a musician must know is name and raga of the song and constant training. In the case of an actor, he must study the script and try to act as guided by the Director. In both the cases, there are games. In the case of a cartoonist, he has his own game. In a sense, all of us are in one way or other, actors. We suppress our own impressions and act as the situation demands. A cartoonist is reverse. He has to express what he feels but without offending anyone. A cartoonist however has to have his in-depth knowledge of the subject; mostly the victims of the cartoonist are politicians, the people -- all of us -- at large and the Government. Therefore, he needs a keen sense of observation of the entire affairs and the knowledge of the political and social conditions prevailing from time to time. The cartoon must be in such a way to focus the attention of the readers to highlight the deformities and if the reader takes it seriously there is a lot of scope for improvement of his own personality.

I had no idea at what length this write up should be. Mathi replied in his own characteristic style it should be long enough to cover the subject and short enough to be less monotonous. If I have to cover all his cartoons it should run to over 600 pages. Therefore, I shall confine myself to some of the cartoons which attracted me the most.

Let me first confine myself to his cartoon relating to cricket. They may appear to be funny and unrealistic but, factually it is correct. Take for instance, the members of a family visiting a Pillaiyar temple offering to break a coconut in case India wins. How it has enhanced the image of the country or people's happiness did not matter. A housewife goes to her parent's place because her husband was preoccupied with the cricket match for over 45 days during World Cup and, therefore, she felt lonely in the house; a beggar visiting a house enquired the housewife about 'the latest score', when a housewife prepares her home budget works out the cost of attending cricket match, ticket for test match, pop corn Rs.600, Rs.700 for samosa etc. totaling to Rs.2000/- finding hard to make a cut on other expenses.

Our obsession with cricket can better be appreciated by going through his cartoons. It is a telling example of the defect in our society. There is a saying that when more the people are obsessed with entertainment like cricket, IPL, TV serials, etc. less will be their creative capabilities. This is probably one of the reasons why no great inventions have taken place in recent times. If we seriously look at the cartoon we may learn to balance our time and energy between entertainment and work.

There are certain cartoons which narrate present situation in a telling manner. A candidate standing for election comes seeking vote by breaking open the window of the house, he pleads for an apology saying that it was by 'force of habit'. This indicates criminals contest our election. There was a heated discussion between two passengers in a plane. One of them was a politician. In a fit of anger, he was walking out of the place forgetting that he was in the plane. This illustrates how our politicians cannot tolerate difference of opinion and walk outs are resorted to for silly reasons. No doubt that was a little exaggeration. The moral of the cartoon was clear that legislators are not elected or paid for staging a walk out.

The above examples lot of Mathi's cartoon are mere illustrations. There are many more such cartoons which kindle one's heart. The cartoons are not only thought provoking but also very timely and jovial in nature. Due to paucity of time and energy I am not able to write more though I would very much like to deal with his cartoons as extensively as possible. Probably, I have to write a book. Anyway, I am very fortunate to give a small write-up about this enterprising gentleman and I wish him more success in his endeavors. MATHI is a born genius in the cartoon world.

G. Narayanaswamy/ FCA,
President, Rajaji Centre for Public affairs
A well Known auditor for 5 decades/
Auditor to Tamil nadu Former Chief Ministers Rajaji and Kamaraj.

×

நானும் மதியின் ரசிகன்


1990-களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். ஒரு நாள் துக்ளக் ஆசிரியர் சோ சார் அவர்களின் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த கார்ட்டூன்கள் சிலவற்றை தற்செயலாக நான் எடுத்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சோ சார் "எந்தக் கார்ட்டூன் உங்களுக்குப் பிடிக்குது?' - என்று கேட்டபடியே என் கையிலிருந்த கார்ட்டூனை வாங்கிப் பார்த்தார்.

"நல்லாயிருக்குது சார். யார் போட்டது இது?' என்று கேட்டேன். "புதுசா ஒரு கார்ட்டூனிஸ்ட் அனுப்பியிருக்கார். ஐடியா, ஸ்டிரோக் ரெண்டுமே நல்லாயிருந்தது. அதான் வெச்சிருக்கேன்' என்றார். பின்னர்தான், அக்கார்ட்டூன்களை அனுப்பியவர் பெயர் மதி என்று தெரிந்தது. அதைத் தொடர்ந்து எண்ணற்ற கார்ட்டூன்களை துக்ளக்கில் போட்டு, துக்ளக் வாசகர்களிடையே பிரபலமடையத் தொடங்கினார் எனது இனிய நண்பர் மதி. பல வருடங்கள் துக்ளக் அட்டைப் படம் அவரது கை வண்ணத்தில் வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அவர் எங்களைப் பிரிந்து செல்லும் வரை, அவர் துக்ளக்கில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்நாட்களில் மதியுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்ததால், அவரது இனிய பண்புகளும், இயல்பான நகைச்சுவை உணர்வும் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமின்றி, அவரது கருத்தாழம் மிகுந்த கார்ட்டூன்கள் என்னை அவரது ரசிகர்களில் ஒருவனாகவே ஆக்கிவிட்டன.

அவர், பத்திரிகையில் கார்ட்டூன் போடத் தொடங்கிய காலம் முதல், அநேகமாக அவரது அனைத்துக் கார்ட்டூன்களையுமே தவறாமல் ரசித்து வந்திருக்கிறேன். துக்ளக் பணியின் காரணமாக, ஒவ்வொரு நாளும் முக்கிய பத்திரிகைகள் அனைத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இருந்ததால், என் பார்வையிலிருந்து அவரது ஒரு கார்ட்டூன்கூட தப்பியதில்லை எனலாம். எப்போதாவது அவரது கார்ட்டூன்களில் சில என் கருத்துக்கு மாறுபட்டிருந்தாலும், அவர் தன் கருத்தை வெளிப்படுத்தும் விதமும் அவரது ஓவியத் திறனும் நிச்சயமாக என்னை ஈர்க்கும் வகையிலேயே அமைந்து வந்துள்ளன.

பல வருடங்களாக எனது கார்ட்டூன்களும் துக்ளக்கில் இடம் பெற்று வருகின்றன. ஆனால், வரைகின்ற திறன் என்னிடம் இல்லாததால், ஆர்ட்டிஸ்டிடம் நான் ஐடியாக்களை எழுதிக் கொடுத்து, அதன்படி அவர் வரைய வேண்டும். மதிக்கு இது போன்ற பிரச்னை இல்லை. அபாரமான ஓவியத் திறன், கார்ட்டூனுக்கான கருத்தை உருவாக்கும் ஆற்றல்- இரண்டும் இணைந்து மதியின் வசப்பட்டிருப்பது, இறைவன் அவருக்கு அருளியுள்ள வரம். அதை அவர் முழுமையாக வெளிப்படுத்தி வருவதால், பத்திரிகையுலகில் அவர் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். அதுவும் தரமான தினமணி இதழில் மதியின் கார்ட்டூன்கள் இடம் பெறுவது சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பவை.

துக்ளக், வார இதழாக இருப்பதால், எனது கார்ட்டூன்கள் வெளிவர சுமார் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். அதற்குள் அந்தக் கார்ட்டூன் தொடர்பான அரசியல் பிரச்னையில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டு விட்டால், கார்ட்டூனே சாரமற்றுப் போய் விடக் கூடும். அல்லது சற்று பழையதாகி விடும். ஆனால், மதியின் கார்ட்டூன்கள் உடனுக்குடன் வெளிவந்து விடுவதால், அவை சுவை குறைய வாய்ப்பே இல்லை. மதியின் கார்ட்டூன்களைக் காணும் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்கள் கூட, சற்று வெட்கப்பட்டாலும், நகைச்சுவை உணர்வு இருக்கும் பட்சத்தில் சிரிக்கத் தவற மாட்டார்கள் என்பதே மதி கார்ட்டூன்களின் தனிச் சிறப்பு.

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மண்டையை உடைத்துக் கொண்டு எழுதும் கட்டுரை ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும், மதியின் ஒரு கார்ட்டூன் அனாயாசமாக ஏற்படுத்தி விடுகிறது. இன்றைய அரசியலில், மதியின் கார்ட்டூன்கள் ஏற்படுத்தி வரும் தாக்கம், பலம் மிகுந்தது என்பதில் சந்தேகமில்லை. பத்திரிகை உலகில் மதியின் சாதனைகள் மேலும் தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்.

-துக்ளக் சத்யா
நகைச்சுவை எழுத்தாளர்,துணை ஆசிரியர், துக்ளக்

×

மதியை மதியால்தான் வெல்ல முடியும்


பிரச்சனையைக் கண்டு கலங்காதே விதியென்று துவளாதே!
விதியை மதியாய் வெல்லு
மதியை தீட்ட வியர்வை சிந்து
என்று காவல் பயிற்சியில் வியர்வை வடிய பயின்று பணியில் கிடைப்பது சில நேரம் புகழாரம் பல நேரம் இகழாரம்!
இக்கடுஞ் சூழலில் மனதைக் குளிர வைப்பது நகைச்சுவை. பத்திரிகையில் செய்திகள் பல, ஆனால் அவற்றை சித்திரத்தில் வடிவமைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் மதிநுட்பம் தினமணி மதிக்கு மட்டும்தான்!
லட்சுமணனின் "காமன் மேன்' வழியில் மதியின் "பொதுஜனம்' சித்தரிப்பில் நம்மை காண்கிறோம். நாம் நினைப்பதை, உணர்வதை பொது ஜனம் பிரதிபலிக்கிறார்.
காவல் துறையை சாடினாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. வீரப்பன் கார்டூன் தூள்!
மதியை மதியால் தான் வெல்ல முடியும் இப்போதல்ல எப்போதும்!



ஆர். நடராஜ் IPS,
எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர்

×

மதியின் மதியே தனி


இராமாயணம் பற்றி, மகாபாரதம் பற்றி எழுது என்றால் பக்கம் பக்கமாக எழுதலாம். கார்ட்டூன்கள் பற்றி சில வரிகள் எழுதுவது கூடக் கஷ்டமானதே. கேட்டு ரசிப்பது இசை என்பது போல பார்த்து ரசிப்பதற்கே கார்ட்டூன்கள். நூறு வார்த்தைகள் நீட்டி முழக்கிச் சொல்வதை கார்ட்டூனின் நான்கே கோடுகள் நறுக்கென்று மனதில் பதியும்படி சொல்லும். தமிழ்நாட்டு கார்ட்டூனிஸ்ட்களில் இப்போது முன்னணியில் இருப்பவர் திரு. மதி. இவரது கார்ட்டூன்களை முன்பு துக்ளக்கில் பார்த்திருக்கிறேன். அப்போது அவை வாசகர்களுக்குக் கிடைத்த வாராந்திர விருந்து. இப்போது தினமணியில் மதி தருவது தினசரி விருந்து.

எத்தனையோ கார்ட்டூன்களை நினைவில் வைத்திருப்போம் என்றாலும் அவற்றில் நூற்றுக்கணக்கானவற்றை ஒரு சேர புத்தகமாகப் பார்ப்பது பரவசமான அனுபவம். இந்த புத்தகம் வாசகர்களுக்கு அந்த அனுபவத்தைத் தருகிறது. ரொம்பவும் பிடித்த பத்துக் கார்ட்டூன்களைப் பற்றிச் சொல் என்று கேட்டால் நிஜமாகவே எதை விடுவது, எதை எடுப்பது என்பதில் திணறிப் போகிறோம். அப்படியும் சிலவற்றைப் பட்டியலிட விரும்புகிறேன். அவை வயதான அரசியல்வாதிகள் பற்றிய 2002 வருட கார்ட்டூன்கள். சந்திரபாபு நாயுடு கம்ப்யூட்டர் துறையில் காட்டிய அக்கறையை கிராமப் பொருளாதாரத்தில் காட்டவில்லை என்ற விமர்சனம் உண்டு. அது பக்கம் 26-ல் உள்ள கார்ட்டூன். சங்கீதத் துறை சமாச்சாரங்களை வைத்தே பல கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறார்.

சமகால வரலாற்றின் ஆவணங்கள் பத்திரிகைச் செய்திகள். அதுபோலவே கார்ட்டூன்களும். No man forgets his original trade என்பார் அறிஞர் சாமுவெல் ஜான்ஸன். அதை சமீபத்தில் நிரூபித்தார் மதி. மூத்த கார்ட்டூனிஸ்ட் கோபுலு நாற்பது வருடங்களுக்கு முன்பு வரைந்த வசனமில்லாத நகைச்சுவை கார்ட்டூன்களுக்கு எழுத்தாளர் ஆர். நடராஜன் நிர்வாகக் கோணத்தில் ஒற்றைவரி வாசகங்கள் எழுதினார். "நகைச்சுவையோடு நிர்வாகம்' என்ற அந்தப் புத்தகத்தை மதி கார்ட்டூன் மூலமாகவே விமர்சனம் செய்திருந்தார். பதிப்பாளர் அதைப் புத்தகக் கண்காட்சியில் பெரிய Banner-ஆக வைத்து மகிழ்ந்தார். தினமணியில் கார்ட்டூனாக விமரிசிக்கப்பட்ட ஒரே புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். கார்ட்டூனிஸ்ட்டாக இருந்தால் மதியின் சிறப்பை கார்ட்டூனாக வரைவேன் என்று யாரும் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். அதுதான் மதியின் தனித்தன்மை.

சமகால சமூக, அரசியல் போக்குகள் பற்றிய ஞானமும் கவலையும் உள்ளவரே இப்படிப்பட்ட கார்ட்டூன்களை வரைய முடியும். மதியின் மதியே தனி. அது பிறருக்கு வராது.

நல்லி குப்புசாமி செட்டி,
பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்,
கலை ஆர்வலர், தொழிலதிபர்

×

நானும் மதியின் ரசிகன்


மதியின் மதியே தனி
இராமாயணம் பற்றி, மகாபாரதம் பற்றி எழுது என்றால் பக்கம் பக்கமாக எழுதலாம். கார்ட்டூன்கள் பற்றி சில வரிகள் எழுதுவது கூடக் கஷ்டமானதே. கேட்டு ரசிப்பது இசை என்பது போல பார்த்து ரசிப்பதற்கே கார்ட்டூன்கள். நூறு வார்த்தைகள் நீட்டி முழக்கிச் சொல்வதை கார்ட்டூனின் நான்கே கோடுகள் நறுக்கென்று மனதில் பதியும்படி சொல்லும். தமிழ்நாட்டு கார்ட்டூனிஸ்ட்களில் இப்போது முன்னணியில் இருப்பவர் திரு. மதி. இவரது கார்ட்டூன்களை முன்பு துக்ளக்கில் பார்த்திருக்கிறேன். அப்போது அவை வாசகர்களுக்குக் கிடைத்த வாராந்திர விருந்து. இப்போது தினமணியில் மதி தருவது தினசரி விருந்து.
எத்தனையோ கார்ட்டூன்களை நினைவில் வைத்திருப்போம் என்றாலும் அவற்றில் நூற்றுக்கணக்கானவற்றை ஒரு சேர புத்தகமாகப் பார்ப்பது பரவசமான அனுபவம். இந்த புத்தகம் வாசகர்களுக்கு அந்த அனுபவத்தைத் தருகிறது. ரொம்பவும் பிடித்த பத்துக் கார்ட்டூன்களைப் பற்றிச் சொல் என்று கேட்டால் நிஜமாகவே எதை விடுவது, எதை எடுப்பது என்பதில் திணறிப் போகிறோம். அப்படியும் சிலவற்றைப் பட்டியலிட விரும்புகிறேன். அவை வயதான அரசியல்வாதிகள் பற்றிய 2002 வருட கார்ட்டூன்கள். சந்திரபாபு நாயுடு கம்ப்யூட்டர் துறையில் காட்டிய அக்கறையை கிராமப் பொருளாதாரத்தில் காட்டவில்லை என்ற விமர்சனம் உண்டு. அது பக்கம் 26-ல் உள்ள கார்ட்டூன். சங்கீதத் துறை சமாச்சாரங்களை வைத்தே பல கார்ட்டூன்கள் வரைந்திருக்கிறார்.
சமகால வரலாற்றின் ஆவணங்கள் பத்திரிகைச் செய்திகள். அதுபோலவே கார்ட்டூன்களும். சர் ம்ஹய் ச்ர்ழ்ஞ்ங்ற்ள் ட்ண்ள் ர்ழ்ண்ஞ்ண்ய்ஹப் ற்ழ்ஹக்ங் என்பார் அறிஞர் சாமுவெல் ஜான்ஸன். அதை சமீபத்தில் நிரூபித்தார் மதி. மூத்த கார்ட்டூனிஸ்ட் கோபுலு நாற்பது வருடங்களுக்கு முன்பு வரைந்த வசனமில்லாத நகைச்சுவை கார்ட்டூன்களுக்கு எழுத்தாளர் ஆர். நடராஜன் நிர்வாகக் கோணத்தில் ஒற்றைவரி வாசகங்கள் எழுதினார். "நகைச்சுவையோடு நிர்வாகம்' என்ற அந்தப் புத்தகத்தை மதி கார்ட்டூன் மூலமாகவே விமர்சனம் செய்திருந்தார். பதிப்பாளர் அதைப் புத்தகக் கண்காட்சியில் பெரிய ஆஹய்ய்ங்ழ்-ஆக வைத்து மகிழ்ந்தார். தினமணியில் கார்ட்டூனாக விமரிசிக்கப்பட்ட ஒரே புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். கார்ட்டூனிஸ்ட்டாக இருந்தால் மதியின் சிறப்பை கார்ட்டூனாக வரைவேன் என்று யாரும் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். அதுதான் மதியின் தனித்தன்மை.
சமகால சமூக, அரசியல் போக்குகள் பற்றிய ஞானமும் கவலையும் உள்ளவரே இப்படிப்பட்ட கார்ட்டூன்களை வரைய முடியும். மதியின் மதியே தனி. அது பிறருக்கு வராது. நல்லி குப்புசாமி செட்டி
6.4.2013

×

"விஷுவல் மீடியா'வின் திருக்குறள்!


"துக்ளக்'' கில் தொடங்கி "தினமணி''யில் நீண்ட காலப் பணிவரை மதி அவர்களை அறிவேன். இந்த இரண்டு பத்திரிகைகளிலும் ஒரு பக்கமோ, அரை அல்லது கால் பக்கமோ, மதியின் கார்ட்டூன் பத்திரிகையின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாகவே இருந்து வந்துள்ளது. ஒரு பத்திரிகையில் தலையங்கச் சிந்தனை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு கார்ட்டூனும் வாசகரின் சிந்தனையாகப் படிந்துவிடுகிறது.

மதி அப்பணியைச் சிறப்பாகவே செய்து வருகிறார். மதியினுடைய கார்ட்டூன் பாதிப்பின் விசேஷமே, நம் பலருடைய சிந்தனை, ஆதங்கம், கேலி, தார்மிகக் கோபம் இவையனைத்தையும் அவை வெளிப்படுத்துவதுதான். அரசியல் தொடங்கி, சமுதாய அவலங்கள், சுற்றுப்புறச் சூழல், டி.வி. மோகம் எனப் பல விஷயங்களையும் அவர் கார்ட்டூனில் வெளிப்படுத்தி வருகிறார். அவர் கார்ட்டூன்கள் பல, என்னை மிகவும் ரசிக்க வைத்து, அவரை உடனே பாராட்டத் தூண்டியுள்ளன. என்னுடைய பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் நான் ""மதியின்'' கார்ட்டூனை மேற்கோள் காட்டியுள்ளேன். கார்ட்டூனுக்கு படம் போடுவது என்பது ஒரு சிந்தனையை ஒட்டுமொத்த சூழலில் ஒரு படம் மூலமோ ஓரிரு வரிகளிலோ வெளிப்படுத்துவது ஆகும். கார்ட்டூன் "விஷுவல் மீடியா'வின் "திருக்குறள்'' என்றால் மிகையாகாது.

- கே. விஜயன்
மூத்த வழக்கறிஞர்

×

கடிக்கும் வல்லரவும் கார்ட்டூனும்


ஆரம்பப் பள்ளி நாள்களில், மூன்றாம் வகுப்பிலேயே, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்துவிட்டது. இதைச் சொல்லவருவதன் காரணம், தமிழ் கூறு நல்லுலகின் தமிழனுக்குப் பிறந்த தமிழ் மாணவர் சிலருக்குப் பத்தாவது வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிப்பதுவே இயல்பாக இருக்கிறது. எனது பள்ளிப்பருவத்தில் பத்து வயதிலேயே நூலகத்துக்குப் போக ஆரம்பித்து விட்டாலும், நன்றாகவே வாசிக்கத் தெரிந்திருந்தாலும் முதலில் கண்ணுறுவது கார்ட்டூன் தான். கார்ட்டூனுக்குநிகரான தமிழ்ச் சொல் என கேலிச் சித்திரம் அறிமுகமானது மிகவும் பிற்பாடுதான்.

அரசியல் தலைவர் பலரையும் கேலிச் சித்திரங்கள் தீட்டினார்கள். காந்திஜி, நேருஜி, ராஜாஜி, ஈ.வெ.ரா., காமராஜ், அண்ணாதுரை, பக்தவத்சலம், ரசிகமணி, ம.பொ.சி. என. கைத் தடியையும் கண்ணாடியும் வரைந்தால் எமக்கு அது காந்தி எனவிளங்கிற்று.

கோணலாகப் போடப்பட்ட முகங்களைக் கண்டு எந்தத் தலைவரும் அன்று கோபித்துக் கொண்டதில்லை. உண்மையில், கேலிச் சித்திரம் வரைய வாகான முகம் கொண்டவர்கள் பாக்கியசாலிகள். சில கோடுகளும்புள்ளிகளுமே அவர்களது குணச் சித்திரத்தைக் கொண்டு வந்துவிடும்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம், கலிஃபோர்னியா சென்று, அங்கிருந்து லாஸ் ஏஞ்சலஸ் போய், நண்பர்கள் ராஜேஸ், அவர் சிறுவன் ரிஷி, நரேன், அருண், விசு ஆகியோருடன் ஹாலிவுட் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் உள்ளே திரிந்து கொண்டிருந்தேன். இரண்டு ஓவியர்கள் அமர்ந்து உருவப் படமும் கார்ட்டூனும்தீட்டிக் கொண்டிருந்தனர். நன்கொடையை நண்பர்கள் கொடுத்ததனால் எவ்வளவு என்பது தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஒருவர் வரைந்து கொடுத்த எனது கேலிச் சித்திரம் வீட்டில் வைத்திருக்கிறேன். அதைப் பார்த்தபோது தெரிந்தது, நமது முகம் கேலிச் சித்திரத்துக்குப் பொருந்தி வராது என.

தாணு, மாலி, கோபுலு போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் உயிரோட்டமுள்ள, உடல்மொழி நெறிக்கும் கேலிச் சித்திரங்கள் எங்கள் காலத்தில் மிகவும் பிரசித்தமானவை. ஆனந்த விகடனின் அட்டைப் படமாக, கோபுலு, வண்ணத்தில் வரைந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்து பரவசப்பட்டிருக்கிறோம். அது போன்றே மதன் சித்திரங்களும்.

எழுத்தறிவற்றவன் கூட, படம் பார்த்துப் புரிந்து கொண்டான். பல பக்கங்களில் மிகைச் சொற்களில் சொல்ல வேண்டியதை சில கோடுகளும் புள்ளிகளும் தீற்றல்களும் கொண்ட கேலிச் சித்திரங்கள் உணர்த்திவிடும்.

புகைப்படம் பார்த்து, அல்லது ஆளை முன்னால் உட்கார்த்தி வைத்து வரையும் உருவப் படத்தை விடக் கடினமானது கார்ட்டூன்கள் வரைவது. உண்மையான உருவை ஒத்திருக்க வேண்டும். ஒரு வகையில், பாவம் இருக்கும் வேண்டும், செயல் இருக்க வேண்டும், குணாம்சம் தெளிவாகத் தெரிய வேண்டும்.

1967-ன் பொதுத் தேர்தல் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதியது. நல்ல விதமாகவா, தீவினை போலவா என்பது தனி விவாதப் பொருள். அப்போது ஸ்ரீதர் வரைந்ததொரு கார்ட்டூன். தி.மு.க. கூட்டணித் தலைவர்களான ராஜாஜி, பெரியார், அண்ணாதுரை, காயிதே மில்லத் இஸ்மாயில் ஆகியோரைக் கழுதை மேல் உட்கார வைத்து, கழுதை மீது தி.மு.க. கூட்டணி என்று எழுதிய கேலிச் சித்திரம். அன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அன்றைய மனநிலையில் என் போன்றோருக்கு பெரிய ஆத்திரம் தந்த கேலிச் சித்திரம் அது. சிறப்புஎன்னவென்றால், அதைத் தேர்தல் பிரசார சுவரொட்டியாக அடித்து வீதியெங்கும் ஒட்டியது பேராயக் கட்சி. அந்தக் கட்சியிலும், அன்று, அந்த கார்ட்டூனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசித்த அறிவாளிகள் இருந்தனர்.

கார்ட்டூன் அல்லது கேலிச்சித்திரம் என்பது இரு பரிமாணக் காட்சி ஊடகக் கலை. அதன் இலக்கணங்கள் காலந்தோறும் மாறி வந்துள்ளன. இன்றோ யதார்த்தம் அல்லாதஅல்லது பகுதி யதார்த்தம் உள்ள ஓவியங்களைக் கார்ட்டூனிஸ்ட்கள் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஸ்கெட்ச் பயன்படுத்துகிறார்கள். பலர் பென்சில் பயன்படுத்துகிறார்கள். சிலர் இந்தியன் மை பயன்படுத்துகிறார்கள். தூரிகை, பேனா, மார்க்கர் பயன்படுத்தப்படுவதும் உண்டு.

பெரும்பாலும் கருப்பு- வெள்ளையிலேயே கார்ட்டூன்கள் வரையப்பட்டன. சிலர் வண்ணங்களிலும்வரைந்தனர்.

பிரித்தானிய கார்ட்டூனிஸ்ட் டேரன் புர்டி, சார்லஸ் ஆடம்ஸ், அட்டிலா அடோர்ஜனி முதலானோர் உலகப் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள். நான் வளர்ந்து பெரியவனாகி, பம்பாய்க்குப் பணிக்குப் போன பிறகே, பாபா சாகேப் தாக்கரே என்று பின்னர் அறியப்பட்ட, ஒரு மகாத்மாவின் பிம்பம் தரித்த, சிவசேனைத் தலைவர், பால் தாக்ரே சிறந்த கார்ட்டூனிஸ்ட் என தெரிந்து கொண்டேன்.

இந்திய கார்ட்டூனிஸ்ட்களான மலையாளத்தைச் சார்ந்த அபு ஆப்ரகாம், சங்கர், தாணு, ஆர்.கே. லக்ஷ்மண் ஆகியோர் புகழ் பெற்றவர்கள். அப்போது "சங்கர்ஸ் வீக்லி' என்றொரு வார இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் சங்கர்வரைந்த பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவின் கேலிச் சித்திரங்கள், ஆழமான அரசியல் அறிவையும் உணர்வையும் தந்தவை.

கோவாக்காரரான மரியோ மிராண்டோ அன்று ஃபிலிம்ஃபேர், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா ஆகிய பருவ இதழ்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். பார்த்ததும் சொல்லிவிடலாம், இது மரியோ மிராண்டோ என்று.

ஆர்.கே. லட்சுமணன் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் சகோதரர். ஆர்.கே. நாராயணனின் மால்குடி டேய்ஸ் எனும் நவீனத்தின்பக்கங்களில் கோட்டோவியங்கள், கேலிச் சித்திரப் பாணியில் தாராளமாக இடம் பெற்றிருந்தன. இன்றும் அந்தப் பதிப்பு கிடைக்கலாம். பின்பு தொலைக்காட்சித் தொடராக வந்த நாவல் அது.

எனது புத்தகங்கள் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை', "மண்ணுள்ளிப் பாம்பு' ஆகியவற்றுள் ஓவியர் ஜீவா வரைந்த கேலிச் சித்திரங்கள் போன்ற கோட்டோவியங்களைப் பயன்படுத்தி இருந்தோம். ஆர்.கே. லக்ஷ்மண் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கேலிச்சித்திரக்காரர். நாட்டியக் கலைஞரும்நடிகையுமான குமாரி கமலாவின் கணவராக இருந்தவர். 1972 நவம்பரில் பம்பாய்க்குப் புலம் பெயர்ந்து இறங்கிய தினத்தின் மறு தினத்தில் இருந்தே நான் அவர் விசிறி. டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் ஆங்கில நாளிதழின் இடக்கையோரம், அவர் கார்ட்டூன் இடம் பெறாத விடியல் இல்லை. You said it' என்று தலைப்பிடப்பட்டிருக்கும். அவர் வரையும் பொது ஜனம், இன்றைய Common Man அல்லது "ஆம் ஆத்மி'. அவரது கைப்பிடி வளைந்த குடை, வேடிக்கை பார்க்கும் காகம், விளக்குத் தூண், அணிந்திருக்கும் பொத்தல் கோட்டு இன்றும் நினைவில் இருப்பவை. உட்பக்கங்களில்அவர் வரைந்த அரசியல் கேலிச் சித்திரங்கள் உயிர்ப்புள்ளவை. ஒரு நெடும் பொழிவு ஏற்படுத்தும் கிளர்ச்சியை ஒருகார்ட்டூன் நிகழ்த்தியது அன்று.

டைம்ஸ் நிறுவனத்தில் இருந்து பிற்பகலில் வெளியான "ஈவ்னிங் நியூஸ் ஆஃப் இந்தியா' மாலை இதழிலும் அவருடைய கார்ட்டூன்கள் இருந்தன. என்ன பொருளாதார வறுமை இருந்தாலும், மாதக் கடைசியில் சாப்பிட இரண்டு பணம் கைமாற்று வாங்கினாலும், அறிவு வறுமைக்கு ஆட்பட்டதில்லை. விடுமுறை தினங்களில்கூட, நான் குடியிருந்த செம்பூர் ரயில் தண்டவாளங்களின் ஓரம் இருந்த, சோப்டா பட்டி என்றழைக்கப்பட்ட குடிசையில் இருந்து எழுந்து நடந்து போய் ரயில் நிலையத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வாங்க மறந்ததில்லை. வாங்கியதும் பார்ப்பது You said it’.

எனது புத்தகங்கள் "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை', "மண்ணுள்ளிப் பாம்பு' ஆகியவற்றுள் ஓவியர் ஜீவா வரைந்த கேலிச் சித்திரங்கள் போன்ற கோட்டோவியங்களைப் பயன்படுத்தி இருந்தோம். ஆர்.கே. லக்ஷ்மண் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கேலிச்சித்திரக்காரர். நாட்டியக் கலைஞரும்நடிகையுமான குமாரி கமலாவின் கணவராக இருந்தவர். 1972 நவம்பரில் பம்பாய்க்குப் புலம் பெயர்ந்து இறங்கிய தினத்தின் மறு தினத்தில் இருந்தே நான் அவர் விசிறி. டைம்ஸ் ஆஃப் இந்தியா எனும் ஆங்கில நாளிதழின் இடக்கையோரம், அவர் கார்ட்டூன் இடம் பெறாத விடியல் இல்லை. You said it' என்று தலைப்பிடப்பட்டிருக்கும். அவர் வரையும் பொது ஜனம், இன்றைய Common Man அல்லது "ஆம் ஆத்மி'. அவரது கைப்பிடி வளைந்த குடை, வேடிக்கை பார்க்கும் காகம், விளக்குத் தூண், அணிந்திருக்கும் பொத்தல் கோட்டு இன்றும் நினைவில் இருப்பவை. உட்பக்கங்களில்அவர் வரைந்த அரசியல் கேலிச் சித்திரங்கள் உயிர்ப்புள்ளவை. ஒரு நெடும் பொழிவு ஏற்படுத்தும் கிளர்ச்சியை ஒருகார்ட்டூன் நிகழ்த்தியது அன்று.

அரசியல் விமர்சனக் கேலி என்பது இஞ்ஞான்று மிகவும் தரம் இறங்கிப் போயிற்று என்பது உண்மை. விமர்சனத்தை, கிண்டலைத் தாங்கிக் கொள்கிற பக்குவம் இழந்து போனார்கள் மக்கள் தலைவர்கள் என்று தம்மைக் கொண்டாடிக் குதூகலித்துக் கொள்பவர்கள் என்பது இன்னொரு உண்மை. அண்டை மாநிலமான கேரளத்து மலையாளத் தொலைக்காட்சிச் சானல்களில் அச்சுதானந்தனையும் உம்மன்சாண்டியையும் செய்யும் கிண்டல்களை, மிமிக்ரிகளைத் தமிழ்நாட்டில் செய்தால் இனமானத் தமிழினம் சீறும் சிறுத்தை என வெகுண்டு எழுந்து தொலைக்காட்சிச் சேனல் அலுவலகத்தை அடித்து நொறுக்கிவிடும். சகிப்புத் தன்மை கிடக்கட்டும், குற்ற உணர்வு பொங்கிக் கொதித்து நுரைத்து பெருக்கெடுத்து வீரமாய்ப் பாயும் போலும். உண்மையில் கோழைகள் தான் கிண்டலுக்குச் சினம்கொள்வார்கள். மேலும், நகை எனும் ஒரு பொருள் இலாத இனத்தவர்...

1960-ல் இருந்தே நான் தினமணி வாசகன். இதையும் ஆயிரம்கோயிலில் சொல்லுவேன். அன்று தினமணியின் ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமன் மீது எனக்குப்பெரு மதிப்பு உண்டு. அத்தரத்துச் செய்தித்தாள் ஆசிரியர் தமிழுக்கு வாய்ப்புஅபூர்வம். அவரது தலையங்கங்கள்-- அந்தக் காலத்தில் தலையங்கத்தை லீடர் என்று சொல்வோம்-- "கணக்கன்', "பாமரன்' எனும் பெயர்களில் அவரெழுதிய அரசியல், பொருளியல், சமூகவியல் கட்டுரைகள் என்னைத் தகவமைத்துக் கொள்ள பெரிதும் உதவியவை.

1989-ல் மீண்டும் புலம் பெயர்ந்து கோவைக்குப் போந்த பின்பு, தொடர்ந்து தினமணி வாங்குகிறேன். தேசம் கடந்ததமிழனுக்கு தினமணி நீட்டிய நேசக்கரம் ஒரு சிறப்பு ஈர்ப்பு. கோவையில், என் வாடகை வீட்டு வாசலில் காலை ஐந்தே முக்காலுக்கு வந்து விழும் ஓசை கேட்டு, கதவு திறந்து, முதலில் பார்ப்பது தலைப்புச் செய்தியும் மதியின் கார்ட்டூன் "அடடே'யும்.

தனித்துவம் மிக்க பல கார்ட்டூன்ஸ்ட்களில் சிறப்பானவர் "மதி'. மதி எனப்படும் ந. மதிக்குமார் எனும் ஓவியரை நான் இதுகாறும் சந்தித்ததில்லை. பக்கத்து இருக்கையில் பயணம் செய்தால் என்னால் அடையாளம்தெரிந்து கொள்ள இயலாது. பெரு மதிப்புறு புகழ்பெற்ற ஓவியர்கள் ஆதிமூலம், சந்ரு, மருது ஆகியோரைச் சந்தித்து உரையாட எனக்கு வாய்த்ததுண்டு.

என் மகள் திருமணத்தின்போது, தனது துணைவியாருடன், முன்தினமே வந்திருந்து, மண்டபம் காலி செய்வது வரைக்கும் இருந்தவர் ஓவியர் மருது. அவரது ஓவியப்புத்தகம் "வாளோர் ஆகும் அமலை' என்னிடம் இருக்கும் அரிய சேமிப்பு.ஆனால் இளையவரான மதியுடன் எத்தொடர்பும் இருந்ததில்லை.

1967 பொதுத் தேர்தல் தொடங்கி, திருப்பித் திருப்பி, புரட்டிப் புரட்டித் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்ட பேராயக் கட்சி, அதிலிருந்து கிளைத்த தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் தாய்ச் சங்கத்துடன் இணைந்த பின்பும் சட்டமன்றத் தொகுதிகள் பத்துக்கும் இருபதுக்கும் தி.மு.க.விடமும் அ.தி.மு.க.விடமும் குறையிரந்து நிற்கும் அவலம் யாவரும்அறிந்தது.

2001-ன் தொடக்கத்தில் மதி வரைந்த கார்ட்டூன்.மாபெரும் ஏல விற்பனை மேடை. அதன் மேல் சவலைக் குழந்தை போல கருப்பையாமூப்பனார், த.மா.கா. என அட்டை கோர்க்கப்பட்டு அமர்ந்திருக்கிறார். மேடைக்கு இடப் பக்கம் அம்மா. வலப் பக்கம் தமிழினத்தலைவர். அவர்கள் பெயரோ, கட்சிப் பெயரோ குறிக்கப்பட்டிருக்கவில்லை. பார்த்தாலேதெரிந்து கொண்டு பரவசமும் படலாம். ஏல விற்பனையை அம்மா தொடங்குகிறார். 10 சீட். கலைஞர் கூவுகிறார்20 சீட்... அம்மா மறுபடியும் 25 சீட்... கலைஞர் ஏலத்தை உயர்த்தி 40 சீட்...

நாற்பதில் ஏலம் முடிந்துவிட்டது போலும். அந்தக் கேலிச்சித்திரத்தில் மூப்பனாரின் முகபாவம் ஒன்றுண்டு, "பெப்பரப்பே' என்று. அல்லது, "எப்படி, பட்டத்து யானையும் வெண்கொற்றக் குடையும் அணிசேர் புரவியும் ஆட்பெரும்படையும் மணிமகுடமும் செங்கோலும் அரசு கட்டிலும் எறியும் முரசு மாக இருந்த யாம் திருவோடும் கையுமாக ஆகி விட்டோமே' எனும் கழிவிரக்கம். இது மதியின் அரசியல் விமர்சனம்.

குதிரைப் பந்தயம் என்பது ஒரு சூதாட்டம். அதில் குதிரைச் சொந்தக்காரர்களுக்கு பங்குண்டு. புக்கிகளுக்கும் பங்குண்டு. ஜாக்கிகளுக்கும் பங்குண்டு. சூதாடுவோருக்கும் பங்குண்டு. அரசாங்கத்துக்கும் பங்குண்டு. ஆனால் குதிரைக்குப் பங்கிருக்க வழியில்லை. ரம் ஊற்றிக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதன் சக்திக்கு அது ஓடும். தோற்பதும் வெல்வதும் அதன் ஓட்டத்தால் தீர்மானிக்கப்படாது. ஆனால், குதிரைகளான விளையாட்டு வீரர்களே நேரடியாகச் சூதில் பங்கேற்கும் அவலம்தான் கிரிக்கெட். ஒரு தேசத்தை, தேசத் தலைவர்களின் கூட்டுறவோடு மோசடி செய்யும் மூன்றந்தர "குலுக்கிக்குத்து' ஆட்டம். சொந்த மக்களையே கூசாமல் கொள்ளையடிக்கும் நம் தேசியக்குணச்சித்திரம் இது. இதை விளையாட்டு என்று மூடர்களும் முழு மூடர்களும்திளைத்துக் கிடக்கிறார்கள். 2000-ம் ஆண்டில் மதி வரைகிறார்--

கிரிக்கெட் விளையாடும் பிட்ச். ஒரு பக்கம்விக்கெட் கீப்பர். வழக்கமாக விக்கட் கீப்பருக்கும் விளையாடும்பேட்ஸ்மேனுக்கும் நடுவில் மூன்று ஸ்டம்பும் அவற்றின் மேல் இரண்டு பெயில்களும்இருக்கும். பிட்சின் மறுமுனையில் மற்றொரு ஆடாத பேட்ஸ்மேன்இருப்பார். மதியின் கார்ட்டூனில், விளையாடும் பேட்ஸ்மேன் ஸ்டம்புக்கு முன்னால் காத்து நிற்பதற்குப் பதிலாக, ஸ்டம்புக்குப் பின்னால், பார்த்து நிற்கிறார். எதிர்ப்புறம் ஓடி வரும் பந்து வீச்சாளர். ஸ்டம்புக்கு பின்னால்நிற்கும் பேட்ஸ்மேனைப் பார்த்து எதிர்முனை பேட்ஸ்மேன் சொல்கிறார்-- "ஏற்கனவே பணம் வாங்கிட்டார்னு நினைக்கிறேன்' என்று.

இந்தக் கார்ட்டூனை ரசிப்பதற்கு அதைக் கண்ணுற வேண்டும். அதற்குக் கீழே இன்னொரு கார்ட்டூன். அதில் தொலைக்காட்சி அறிவிப்பாளர் சொல்கிறார்—This match is brought to you by Dawood Ibrahim!' என்று. அதைப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு தாவூத் இப்ராஹிம் யாரெனத் தெரிய வேண்டும். துபாயில் ஜெயமோகனுடன் நகர்வலம் வந்தபோது ஆசிஃப்மீரானும் ஜென்ஸீயும் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள் தாவூத் இப்ராஹிம் வீடு என்று.

"அப்பரும் சுந்தரரும் அருள்மணிவாசகரும் அருணகிரிநாதரும் அருமைத் தாயுமானாரும் குருமணி சங்கரரும் பொருள் உணர்ந்தே உன்னை, எப்படிப் பாடினாரோ, அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே' என்பது போல் மாளிகை பார்த்துப் பாடத் தோன்றியது.

மற்றொரு கேலிச் சித்திரம், கிரிக்கெட் ஸ்கோர் போர்டு காட்டுகிறது. பேட்ஸ்மேன் நம்பர்4 - 900 கோடி, பேட்ஸ்மேன் நம்பர் 5 - 700 கோடி, பேட்ஸ்மேன் நம்பர் 6 - 500 கோடி, பேட்ஸ்மேன் நம்பர் 7 - 300 கோடி என்று.

தேசத்தின் வீர விளையாட்டு என்று அதனை மாரோடு அணைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தனர் இந்தியப் பெருங் கோடியினர். இன்று அது தேசியஊழல் விளையாட்டாக, கருநாகப் பாம்பு எனப் பிளந்த நா நீட்டித் துழாவுகிறது.

"மதி கார்ட்டூன்ஸ்' முகப்பு அட்டையில் ஒரு கேலிச் சித்திரம். தென்னகமாநிலங்கள் நான்கு. ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு. மதி ஐந்தாக வரைகிறார். தமிழ்நாடு இருக்க வேண்டிய இடம் இரண்டாய்ப் பிரிக்கப்பட்டு மேற்பாதி ஸ்டாலின் நாடு, கீழ்ப் பாதி அழகிரி நாடு எனக் குறிக்கப்பட்டிருந்தது. எனது ஐயம் மூன்று பங்கு அல்லவா என்பது!

ஒரு கட்டுரை செய்யும் காரியத்தை ஒரு கேலிச்சித்திரம் செய்கிறது. இதை வரையும் தைரியம், அதுவும் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, மதிக்கு இருக்கிறது.

புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு சித்திரம். "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது' என்பது பழமொழி. கழுதை, எவ்விதம் கட்டெறும்பாக உருவ மாற்றம் பெறுகிறது என வரையப்பட்டிருந்தது. ஆனால் கேலிஅதில் இல்லை. கழுதை கட்டெறும்பாகும் ஏழு படங்களில் ஒவ்வொன்றின் மேலும் த.நா. காங்கிரஸ் எனும் ஏழு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததுதான். எனக்கு ஒரேயொரு மறுப்பு உண்டு. அது கழுதையாக இருந்தால், ஈழத் தமிழன் ஒன்றே கால் லட்சம் பேரைக் கொல்வதற்கு, கூட்டு நின்றிராது. இது வேறு ஏதோ அபாயகரமானதொன்று.

சுதந்திரம் பெற்ற இந்த 66 ஆண்டுகளில், பாரத தேசத்தை எத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டது? அவற்றுள் எத்தனை ஆண்டுகள் பண்டித நேருவும் அவர் வம்சாவளியினரும்-- சோனியா காந்தியின் பின் இருக்கை இயக்கம் உட்பட-- ஆண்டிருப்பார்கள்?

மதியின் மற்றொரு கார்ட்டூன். வரையப்பட்டஆண்டு, 2000. உள்ளாடை, இடுப்பில் மட்டும், அணிந்த குழந்தையின் கட்-அவுட் ஒன்று. பீடத்தில் "வருக' என்று "கை' படம். மதியின் பொது ஜனம் சொல்கிறார்-- "வேற யாரு? பிரியங்காவோட பையனாகத்தான் இருக்கும்....!'

இந்தியத் தன்மானத்துக்கும், வீரத்துக்கும், அறிவுக்கும், கல்விக்கும், பண்பாட்டுக்கும், அரசியல் விவேகத்துக்கும் எண்ணற்ற கசையடிகள் வழங்குவது. ஆனால் நமதுகாட்டெருமைத் தோலுக்கு உறைக்க வேண்டுமே! எத்தனை காய்த்துப் போன, மரத்துப் போன, தடித்துப் போன காண்டாமிருகத் தோல் நமக்கு? "அடிமைப் PEN' என்றொரு கார்ட்டூன். பேனாவுக்கு கைவிலங்கு பூட்டி அம்மா இழுத்துப்போவது போல. எவருக்கும் எந்தக் காலத்திலும் வளைந்து கொடுக்காத பேனாவை எப்படிக் கையாள்கிறது அரசு என்பதற்கான கண்டனம். ஆனால் எனக்கொரு சந்தேகம். இந்திய மக்களாட்சியில் PRESS என்பது சமய சந்தர்ப்பம் பார்த்தும் ஆளுக்குத் தகுந்தாற் போலவும் அரசின் சலுகைகளுக்கு மயங்காத துணிச்சலும் நடு நிலைமையும் தெளிவான சிந்தனையும் பெரும்பான்மையான தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு உண்டா? அரசுகள் சில சமயம் விலங்கு பூட்டுகிறது. பல சமயம் அலுவலகமே விலங்கு பூட்டித்தானே அனுப்புகிறது! நான் அடிப்பதுபோல அடிக்கிறேன் என்பது தானே இன்றைய பத்திரிகை தர்மம்?

"சாதனையும் சோதனையும் என்று இரண்டு வீரப்பன் கார்ட்டூன்கள். வீரப்பனை வைத்து நாளிதழ்கள், பருவ இதழ்கள் எப்படி பஜ்ஜி, போண்டா செய்து சுடச்சுட விற்பனை செய்தன என்பதை மதி பொருட்படுத்தி, மேற்சென்று இடித்துரைக்கிறார். தாம்சார்ந்திருக்கும் துறையையும் விமர்சனம் செய்யும் கலைநேர்மை இருக்கிறது அவரிடம். Press meet, அம்மா ஸ்டைல் என்று இரண்டு கார்ட்டூன்கள். ஒன்று செய்தியாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச உதை. இரண்டாவது தர்ம அடிக்கு அஞ்சி, செய்தியாளர்களே "அம்மாக்களாக' உருமாற்றம் பெற்று விடுவது.

அரசியல் விமர்சனம் என்று மட்டுமே இல்லை. திறமையான, கூர்த்த கற்பனை உண்டு மதியிடம். "காதல் தினம் - 2004' என்றொரு கார்ட்டூன். திருவாளர் பொது ஜனம் குடையைத் தவறவிட்டு, புறம் காட்டி ஓடுகிறார். சகல அரசியல் வியாபாரிகளும் மன்மத பாணங்களுடனும், மலர்க்கணைகளுடனும் துரத்துகிறார்கள்.

ஊராட்சிக்கு ஒன்று, வட்டத்துக்கு ஒன்று, மாவட்டத்துக்கு ஒன்று, மாநிலத்துக்கு ஒன்று, தேசத்துக்கு ஒன்று, சர்வ தேசியத்துக்கு ஒன்று என பன்முக மார்க்சீயக் கொள்கைகள் உண்டு என மதியால் உறுதிபடச் சொல்ல முடிகிறது, ஒரு கேலிச் சித்திரம் வாயிலாக. மார்க்சீயர்கள் பற்களும் நகங்களும் நாக்களும்கொண்டு இதனை மறுத்தாலும், பொது ஜனம் என்றொரு அற்ப ஜீவராசியும் இருக்கிறார்தானே?

மாநிலங்களவைத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு குறுக்கு வழி என்று அறிவர் அனைவரும். தேர்தலில் தோற்றவர், கவர்ச்சி நடிகைகள், ஆயிரக்கணக்கான கோடிகள் வென்ற கிரிக்கெட் வீரர், தரகர்கள், நண்பனின், பகைவனின் காலை நக்கி கொண்டு சேர்க்கும் வாரிசுகள், கனபாடிகள், துதிபாடிகள் என உறுப்பினர் தகுதிகள் உண்டு. ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட வென்றிராதவர் இங்கு பல்லாண்டுகளாக மத்திய அரசின் நிதியமைச்சர், தலைமை அமைச்சர். மாநிலங்கள் அவைக்குப் போக வரிசையில் நிற்கும்கூட்டம் ஒன்றைக் காட்டுகிறது ஒரு கேலிச்சித்திரம். வரிசையில் நிற்பவர்கள் யாரார்? ஊழல் அரசியல்வாதி, மதவாதி, தொழிலதிபர், நடிகர், பள்ளிச் சிறுவர், பசு மாடு என. என்னத்தைச் சொல்லி எவருக்கு உறைக்கப் போகிறது என்றாலும்சொல்லாமல் இருக்க முடியுமா சுதந்திரமான கலைஞனால்?

அதிகம் என்ன, ஒன்றிரண்டு சொற்கள் கூடத் தேவை இல்லாத கேலிச் சித்திரம் ஒன்று. மலைகளின் முகடுகளின் பின்னால் இருந்து உதிக்கும் --- Rising Sun ,Rising Son, Rising Grand son கார்ட்டூன் என்பதே அதிகம் சொற்கள் எழுதப் படாதது. எடுத்துக்காட்டுக்கு காந்தியம் என்றொரு கார்ட்டூன். காந்தியின் வழுக்கைத் தலையும் பின் கழுத்தும் பொக்கை வாய்ச் சிரிப்பும் கண்ணாடியும் காது மடல்களும் எப்படி இறுதியில் கேள்விக்குறியாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன என்று.

கலை, இலக்கிய, சமூக, அரசியல் விமர்சனத்துக்குரிய துணிச்சல், கூர்மை, தெளிவு, விசாலமான அறிவு, விவேகம், நகை, ஓவியத் திறன், சார்பற்ற நிலை யாவும் கூடி வருகிற கலைஞனே சிறந்த கேலிச் சித்திர ஓவியனாக நன்மதிப்புப் பெற இயலும் என்பதற்கு மதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புதிது புதிதான கற்பனை, நையாண்டி, அரசியல்காரர்களின் உடல் மொழித் தேர்வு என, தனக்கெனத் தனியிடம் கொள்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதி.

கேலிச் சித்திரம் என்பது சும்மா சிரித்து விட்டுப் போவதல்ல. தொடர்ந்து நாம் செய்யும் அற்பத் தனங்களில் அடுத்த தினம் வரை மூழ்கிப் போவதற்கும் அல்ல. சிரிப்பைத் தாண்டிய வலி, வலி ஏற்படுத்தும் சினம், சினம் தூண்டும் செயல் என சித்தம் செய்வதற்கு. அஃதன்றி, அதனையோர் பொழுது போக்காய்க் கொள்வது சித்திரத்துக்கும் ஓவியத்துக்கும் செய்யும் நியாயமோ மரியாதையோ அல்ல.

இன்றைய அரசியலைச் சுத்தம் செய்வது என்பது கூட்டம் கூட்டமாக திரியும் வெறி நாய்கûளைத் துரத்தி வேட்டையாடிப் பிடித்து அழிப்பது போன்றது. கடித்தாலும்நோயுண்டு, உமிழ் நீரிலும் நோயுண்டு. நோய் தாக்கியதைக் காலத்தே கண்டறியாவிட்டால், நோய் தாக்கப்பட்டவன் மேலும் ஒரு வெறி நாய். யாரும் எளிதில்முனையாத, முன்வராத காரியம் இது. அருவருப்பானது அல்ல, அபாயகரமானது. "கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்! இவர்கள் கேட்க மாட்டார்கள். அப்போது வேறென்ன செய்வது? யாராவது செய்துதானே ஆக வேண்டும்?

- நாஞ்சில் நாடன்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்

×

HE SPEAKS EVERYMAN’S LANGUAGE


After Ramnath Goenka acquired The Indian Express in 1932, the first editor he appointed was Pothan Joseph. This was because Joseph was the best known name in journalism at the time on account of his brilliant writings in the Bombay Chronicle, his performance in Calcutta’s Capital and finally the way he transformed The Hindustan Times into a powerhouse in Delhi. With all that, Goenka’s unforgettable summing up of Joseph was: “He was the best cartoonist I have known”. That was a tribute both to Joseph’s ability to coax great cartoons out of cartoonists (he famously discovered Shankar) and to the pivotal position cartoons have in journalism.

In fact, Shankar Pillai was the first fulltime professional cartoonist in India. That means, cartoons became an integral part of Indian journalism by 1931. In the advanced countries of the west, cartoons had started appearing only a few decades earlier-in the second half of the 19th Century. Today it is difficult to imagine a daily newspaper without editorial cartoons (or political cartoons as they are sometimes called) as a fixed staple of its contents spread.

Political cartoons influence public opinion more pointedly than political articles do. This is not surprising. To follow the depth and arguments of fine editorial writing, the reader needs to be intellectually disposed. But the impact of a trenchant cartoon can be felt by anyone with an understanding of life around him. Cartoons are built on one central idea which the cartoonist then twists and exaggerates to make his point. The result is that the idea conveyed assumes sharpness and force in concentrated form. This is why cartoons like Abu’s on Emergency (President Fakhruddin Ali Ahmed signing the proclamation decree casually from his bath tub) take on a kind of immortality.

Abu’s classics appeared in The Indian Express. True to its identification with popular causes at all times, the Express group of publications has always paid special attention to cartoons and cartoonists. Currently its southern fort flies the flag of Mathi; perhaps the best contemporary talent to come from the Tamil stream. Beginning as a student reporter in Ananda Vikatan in 1990, Mathi drew cartoons for Tamil magazines of distinction, including Saavi, Kalki and Thuglak. He joined Dinamani as staff cartoonist in 1997. His range as well as the cutting edge of his observations made him stand out and he was invited to draw cartoons for the flagship of the group, The New Indian Express, as well.

Mathi has been a gold medalist in university-level cartoon competitions. He has done oil painting and pencil sketching too. But it may be his political cartoons that will eventually ensure him a place in the journalistic galaxy of India. What makes them endearing is the native simplicity of his comments. There is no harshness in him, no killer instinct. His sabre does not draw blood. He provokes no loud guffaws either. But he always ensures a gentle smile on the reader’s lips. There is a directness in him that is disarming. He speaks everyman’s language. For this reason alone Mathi will be cherished by those who are exposed to his work.

I have no doubt that they will enjoy the uncomplicated humour of Mathi’s approach, the clarity of his craftsmanship and his unfailing social conscience.

M.K.Sonthalia Chairman and Managing Director , The New Indian Express group

Awareness Cartoons

Terrorism

War On Iraq

Eelam

'No'clear Reactors!

Write-Up Cartoons

Quarter Page Cartoons

Half Page/Full Page Cartoons

Speeches

வலிமையே வாழ்வு; பலவீனமே மரணம்..

Writings

அறிவிக்காத எமர்ஜென்ஸி இது!சமூக ஆர்வலர்கள்..

Cartoon In House Of Kalam!

அனைவரும் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி,..

எதிரொலி

சார் உங்களது கார்ட்டூன்களுக்கு எதிர்ப்புகள் வருமா?...

The Common Man

இந்த தேசத்தின் நிஜமான கதாநாயகர் இவர்தான்..

How To Become A Cartoonist?

நாட்டின் மக்கள் தொகை 100 கோடியைத் தாண்டிவிட்ட போதிலும்..

Autograph

இதுவரை மொத்தம் ஏழு நபர்களிடம் மட்டுமே நானாக வலியச் சென்று...

Copyright

இந்த இணையதளத்தில் உள்ள எறும்பு கார்ட்டூன்களிலிருந்து...

Mathi Pictures

Book Launches

Travels

Best Of The Best!

படத்தை கிளிக் செய்யவும்

‘ஹலோ சார்! நீங்க மட்டும்தான் கார்ட்டூன் போடணுமா? நாங்க போடக் கூடாதா?’ என்று கேள்வி கேட்பவர்களுக்கான இடம் இது! இதோ, உங்களுடைய இடம்! எவ்வளவு கார்ட்டூன்கள் வேண்டுமானாலும் போடுங்க. ஆனால் உங்கள் படைப்புகளுக்கு கிடைக்கும் பாராட்டுகள் எதிர்ப்புகள் அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு. இந்த இணையதளம் பொறுப்பேற்காது. மற்ற விதிமுறைகள் உள்ளே…

மேலும்

பதிப்புரிமை © , அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை -